படைவீரர்களுக்கான பொது மன்னிப்புக் காலம்

தப்பியோடிய படைவீரர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது குறித்துப் பேசிய இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன, “இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கான புதிய பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள், சட்ட ரீதியாகத் தம்மை இராணுவத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும்