புகையிரத சேவையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

புகையிரத சாரதிகள், புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக புகையிரத லோகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியவாறு 300 ரூபா சம்பளக் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென்று புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன கூறினார். இம்மாத சம்பளம் இருந்ததைவிட குறைவடைந்துள்ளதாகவும், பிரதமரின் செயலாளருடைய உத்தரவு நிறைவேற்றாத காரணத்தாலும் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது