‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்னும் நூல் வெளியீடு.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் திருநாவுக்கரசு  அவர்களின் ஆக்கத்தில் உருவான “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” எனும் நூல் வெளியீடு பேர்லீன் நகரில் 08.05.2018 அன்று Kopf str-25,12053 Berlin எனுமிடத்தில் அமைந்த மண்டபத்தில் நடைபெற்றது.

(“‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்னும் நூல் வெளியீடு.” தொடர்ந்து வாசிக்க…)

உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல

சர்வதேச மாபியாக்களையே!

புலிகளின் பணத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தன் மகளை helicopter இல் அழைத்துவந்து பூப்புனித நீராட்டுவிழா கொண்டாடியுள்ளார் கனடாவில் உள்ள சுரேஸ் என்பவர்.
இவர் 2009 வரை கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்து வந்துள்ளதுடன் அதன்பின் தனது சொந்த உடமையாக்கியுள்ளார்.

(“உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அவர் நேற்று சிக்மகளூரு நகரில் பிரச்சாரம் செய்தார். கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் காட்டன்பெட் பகுதியில் உள்ள தர்காவுக்கு அவர் நேற்று சென்றார்.

(“நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.)

சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம்.

சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.

(“‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)” தொடர்ந்து வாசிக்க…)

ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை

‘ பக்கத்து வீட்டில் பேயாய் இருப்பது நம் வீட்டில் தேவதையாக மாறாது ‘

அண்மைக்காலமாக இந்த அமைப்புகள் பற்றியும் இந்துத்துவ கருத்தியலின் செயல்பாடுகள் பற்றியும் முகநூலில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றியும் இன்ன பிற மத அமைப்புகள் பற்றியும் ஆழமான உரையாடல் தேவை. அதற்கான சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன் சில அடிப்படையான புரிதல்களை இந்த விவாதத்தின் போது கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்கின்றது.

(“ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்

 

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும்.

(“இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மே – 18 ஆம் திகதி என்பது எனன?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டுமொரு தடவை முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறார். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கையை தவிர மிகுதி அனைத்து விடயங்களிலும் சதிராடுகின்ற தனது சம்பிரதாய கூத்துக்களில் ஒரு பகுதியாக இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளிற்குள் தனியாக நின்று காவடியாடுவதற்கு அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

(“மே – 18 ஆம் திகதி என்பது எனன?” தொடர்ந்து வாசிக்க…)

கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து

………….மிக பெரும் தொகையான பிளாட்டிக் கழிவுகளுடன் மற்றைய கழிவுகளும் இந்த பகுதியில் அகற்றப்படாமல் நீண்டகாலம் இருந்தது….
.
.
…..இந்த கழிவுகளை ராணுவத்தின் உதவியுடன் பெரிய கிடங்கை வெட்டி நிலத்துக்குள் தாட்டிருக்கிறார்கள்…
.
…இப்போது அதைவைத்து தங்கள் அந்த பகுதியை சுத்தமாக்கி விட்டதாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்…

(“கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???

முன்பு இருந்த எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு காரியமாக திரு. நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் பதினைந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போகின்றார். இதே தந்திரத்தைப் பயன்படுத்தி உத்திரப் பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று தான் மோடி லோக்சபாவில் நுழைந்தார். அவருடைய இந்தி பேசும் திறமை எப்படி அவரை வெற்றியடையச் செய்ததோ அதே போல் அவருடைய கட்சியினரின் மதவாதக் கலவரங்களை உண்டாக்கும் போக்கும் அக்கட்சியினை இதுவரை வெற்றியடைய வைத்திருக்கும் காரணிகளாக காணலாம்.

(“கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

பத்ம விபூஷண் விருது பெற்ற பழங்குடிப் பெண்மணி

இந்த வருஷம் பத்ம விபூஷண் விருது
பெற்றவர்கள் பட்டியலில்
ஒரு பழங்குடிப் பெண்மணி இருந்ததை
கவனித்திருக்கமாட்டீர்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம்
கள்ளாறு எனும் வனப்பகுதியை சேர்ந்தவர்
லஷ்மி குட்டி அம்மா.

இவர் தன் நினைவாற்றல் மூலம்
500 மருந்துகள் தயாரிக்கிறார்.

அதன் மூலம், பல்வேறு நோய்கள், பாம்புக்கடி, பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட
மலைவாழ்,பழங்குடி மக்களைக்
காப்பாற்றி வருகிறார்.

தாயிடமிருந்து இத்தகைய மருத்துவ அறிவு
தனக்கு வந்ததாகச் சொல்கிறார் இவர்.

தென் மாநிலங்களில் உள்ள
பல்வேறு கல்வி நிறுவனங்களில்,
இயற்கை மருந்துகள் குறித்து பாடம் நடத்துகிறார்
என்றால் பாருங்களேன்.

1995ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து
‘நாட்டு வைத்ய ரத்னா’ விருது
வழங்கப்பட்ட லஷ்மி குட்டிக்கு
2018ஆம் ஆண்டுக்கான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்ட செய்தியை
கொட்டை எழுத்தில் போட்டிருக்கவேணாமா
ஊடகக்காரர்களே?

(Rathan Chandrasekar)