மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா…?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இம்மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியபட்டியல் மூலம் 7 ஆசனங்கள் கிடைத்த போதிலும், அச்சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு, அவற்றில் ஓர் ஆசனமேனும் கொடுக்கப்படவில்லை.