தொடர்ந்தும் மழை; மட்டு., அம்பாறையில் 10,840 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,840 குடும்பங்களைச் சேர்ந்த 36,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் ஆடுகிறது கொரோனா, ஐவர் தனிமை

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் உட்பட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட ஐந்து பேர், இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய கப்பல் சேவைக் குறித்து ஆய்வு

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்காலுக்கிடையே கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தனர். இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பதுத் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

’புதியவகைக் கொரோனா நாடுமுழுவதிலும் பரவியுள்ளது’

புதியவகைக் கொரோனா வைரஸ் பிரித்தானிய முழுவதும் பரவியுள்ளதாக அந்நாட்டின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்கசன் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலானோருக்கு அல்லது முழு ஐரோப்பாவுக்கும் புதியவகைக் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறைந்த தொற்றாளர்களைக் கொண்ட டென்மார்க்கிலும் இந்த கொரோனா இனங்காணப்பட்டிருப்பதாகவும், இது ஐரோப்பா முழுவதிலும் பரவியிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் போராடிய 33 விவசாயிகள் இறப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய்த் திறக்காதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நேபாள நாடாளுமன்ற கலைப்பைக் கோரியுள்ள அமைச்சரவை

அவசரநிலை சந்திப்பொன்றில் நாடாளுமன்றத்தை கலைக்க நேபாள அமைச்சரவை இன்று பரிந்துரைத்துள்ளது. பெரும்பான்மை ஆதரவை பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி இழந்து விட்டதாக அவரின் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’

(என்.கே. அஷோக்பரன்)

பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார்.

யாழ். மாநகர சபை மேயர் தெரிவு 30இல் இடம்பெறும்

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக, வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கான தெரிவு, டிசெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

புதிய வகையான நாவல் கொரோனா வீரியமாய் பரவுகிறது

நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

விஷ பாம்பால் மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு குளத்தைச் சேர்ந்த 4 வயது குளந்தையான ரவீந்திரன் கிருஸ்டிக்க விஷ பாம்புக் காடியால் உயிரிழந்துள்ளார்.