அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து இஸ்ரேலில் தேர்தல்

இஸ்ரேலின் ஒன்றிணைந்த அரசாங்கத்திலுள்ள இரண்டு கட்சிகளும் அரச வரவு செலவுத் திட்டம் தொடர்பான பிரச்சினையொன்றில் இறுதிநிலையை அடையத் தவறிய நிலையில், இரண்டாண்டுகளில் நான்காவது தேர்தல்களை அந்நாடு நடத்தவுள்ளது.

கொவிட்-19 முற்றுகைக்குள் ஐ. அமெரிக்கா

பிந்தைய கொவிட்-19 அதிகரிப்பால் நோயாளர்களுக்கு படுக்கைகளைக் கண்டுபிடிக்க வைத்தியசாலைகள் திண்டாடுகையில், கிறிஸ்மஸ்ஸுக்கு பயணிக்க வேண்டாமென ஐ. அமெரிக்கர்கள் நேற்று மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை’

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்குவதற்கு, இன்னும் 10 வருடங்கள் தேவைப்படுவதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார். நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன், பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம், வவுனியா – இறம்பைவெட்டி கிராமத்தில், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று கிழக்கில் 915 ஆகியது

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்று (24) வரை 915 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே, கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 406 தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 406பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 388 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய 18 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது.

சீமானுக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை

தமிழ்மொழி தமிழர் தமிழினம் என பேசி வரும் இந்த போலி அரசியல்வாதிகளை நம்பி ஆரம்பத்தில் இவர்கள் பின்னால் பயணித்ததால் இரண்டு முறை சிறை எட்டு வருடம் வழக்கு நீதிமன்றம் என நான் அலைந்து திரிந்தது கொடுமையிலும் கொடுமை மறக்க முடியாத தருணம்.

யாழ்.மாநகரமும் – அதன் மக்களும்

கடந்த 17 ஆம் திகதி பொழிந்த சில மணிநேர மழையினால் யாழ்.பஸ்தரிப்பிட பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு காணப்பட்டது. காரணம் பூபாலசிங்கம் புத்தக சாலைக்கு முன்பாக உள்ள வடிகால் அடைபட்டு மழை நீர் ஓட முடியாமல் கடைகளுக்குள் சென்றது.
திடீர் என்று ஏற்பட்ட இவ் இடரினை உடனடியாக தீர்ப்பதற்கு இரண்டு சுகாதார தொழிலாளிகள் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள்.

அவர்கள் வடிகாலினை துப்பரவு செய்கின்ற சுகாதார தொழிலாளர்கள் அல்ல. இரவு நேரம் மாநகரத்தினை தூய்மைப்படுத்துகின்ற பணியாளர்கள். அவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியினை மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட இவ் திடீர் இடரினைப் போக்குவதற்காக தங்களாகவே தம்மை அதில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

இரவு 7.30 மணியளவில் தொடங்கிய அவர்களது முயற்சி 12.30 மணிவரை தொடந்தது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அச் சிறிய வடிகாலுக்குள் நுழைந்து கணிசமான தூரம் வரை சென்று சீரான நீரோட்டத்திற்கான தடையினை நீக்கினார்கள். அவ் வெள்ள நீர் வடிந்தோட வழியமைத்துக் கொடுத்தனர்.

அவ் பணியினை செய்து முடித்த பிறகு ஒரு தூய்மைப்படுத்தல் பணியாளர் கூறினார். ‘வாய்கால் அடைபட்டு வெள்ளம் தேங்கிவிட்டது. நாளைக்கு மாநகர சபை தூங்கி விட்டாதா என்ன செய்கின்றது என்று எல்லாரும் எழுதுவாங்கள். அது மாநகர சபையில் சுகாதார தொழிலாளியாக இருக்கின்ற எனக்குத்தான் அவமானம். என்று கூறிக் கொண்டு அப் பணியினை முடித்து விட்டு வழமையான தன்னுடைய தூய்மைப்படுத்தல் பணியினை மேற்கொள்வதற்கு அவர் செல்லுகின்றபோது நேரம் இரவு 12.30.

இவ்வாறான அர்பணிப்பு மிக்க தன்னாலேயே இவ் மாநகரம் தூய்மைப்படுகின்றது அதை நானே செய்து முடிக்க வேண்டும் என்று ஊயிரோட்டத்துடன் பணிபுரிகின்ற பொறுப்புமிக்க தூய்மைப்படுத்தல் பணியாளர்களும் உள்ளனர் என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

குறித்த வடிகால் அடைத்தமைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அவர்கள் அல்ல நாங்கள். எங்களுடைய முறை தவறிய பழக்க வழக்கங்கள். அலட்சிய போக்குகள். இவ்வாறான தூய்மைப்படுத்தல் பணியாளர்கள் இந்த மாநகரம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பொறுப்பற்ற தனத்தில் எறிந்து விட்டு செல்லும் கழிவுகளினை அகற்றுகின்றனர். ஆனால் நாம் இன்றும் இம் மாநாகரத்தை அசிங்கப் படுத்திக்கொண்டே இருக்கின்றோம்.

அன்று குறித்த வடிகாலினை அந்த சுகாதார பணியாளர்கள் துப்பரவு செய்து கொண்டு இருக்கையில் அவர்கள் துப்பரவு செய்கின்ற இடத்தில் இருந்து மிக அருகில் 20 மீற்றர் தொலைவில் ஒரு பொது மகன் வந்து அதே வடிகாலினுள் சிறுநீர் கழிக்கின்றார் என்றால் எந்த அளவுக்கு இருக்கின்றது ஒரு சிலரது பகுத்தறிவு என்பதனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு தூய்மைப்படுத்தல் பணியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு குறித்த பணியாளர்கள் எடுத்துக் காட்டு ஒரு குடிமகன் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு குறித்த பொது மகன் எடுத்துக் காட்டு.

எந்த ஒரு பிரதேசத்தின் தூய்மையும் அதன் சுகாதாரமும் அப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் செயல்களிலும் பழக்க வழங்கங்களிலும் தான் தங்கியிருக்கின்றது. வெறுமன மற்றவர்களில் மட்டும் குறை காணுவதை விடுத்து நாமே எம்மை திருத்திக் கொண்டு மற்றவர்களும் அதைப் பின்பற்றி திருத்துவற்கு இடமளிப்பதே சிறந்த ஒரு மாற்றத்தின் முதற் படி.

ஒரு பிரதேசத்தின் மக்களின் பழக்க வழக்கங்களும் அப் பிரதேசத்தின் தூய்மைப்படுத்தல் பணியாளர்களின் பணிகளும் சமாந்தரமான பாதையில் நகரும் போதே அப் பிரதேசத்தின் தூய்மை சாத்தியமாகும்.
மாநகரத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் எமக்குள்ள பொறுப்பையும் பற்றையும் விட பல மடங்கு பொறுப்புடன் காலம் அறிந்து நேரம் அறிந்து இடர் போக்க உழைத்தவர்கள் போற்றுதற்குரியவர்கள்.
வரதராஜன் பார்த்திபன்

கன்னியாஸ்திரீ வழக்கு; பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

கெடும் முன்னரே, இணையவழியில் ‘விழி’ப்பாய் இருப்​போம்

ஒன்றை இழந்துவிட்டு, பரிகாரங்களைத் தேடி அலைவதை விட, நல்லது, கெட்டதை அறிந்து, வகை பிரித்துக் கையாள்வது யதார்த்தத்துக்கு உசிதமாய் அமையும். ஏனெனில், கொவிட்-19 நோய் தொண்டைக்குழியை மூடி, உயிரைப் பறிப்பது மட்டுமன்றி, கண் பார்வையையும் பறிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டங்கியில்…

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பாய்கின்றமையால், அவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.