திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்

இன்று காலை பிரித்தானிய நேரம் காலை 10.55 மணிக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென அவசர அவசரமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கும் நிலையில் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு பிரிட்டனில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

(“திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’

“தமிழ் முற்போக்குக் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்துவத்துடன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமான அ. அரவிந்தகுமார் தெரிவித்தார். அதனை முன்னிலைப்படுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(“அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’” தொடர்ந்து வாசிக்க…)

32 சடலங்கள் இதுவரை மீட்பு

கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்துவிழுந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன. எனினும், குப்பை மலைக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா குடும்பத்தை கட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள் முடிவு: தலைவர்கள் கருத்து

கட்சி நடவடிக்கைகளிலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு அறவே இல்லாத வகையில், அந்தக் குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கிவைக்க முடிவு செய்திருப்பதாக அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

(“சசிகலா குடும்பத்தை கட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள் முடிவு: தலைவர்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை பிரிட்டன் அதிகாரிகள் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர் இந்தியா திரும்புவாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா – பிரிட்டன் இடையேயான நாடுகடுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதாகும் நபருக்கு சில உரிமைகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.

சம்பந்தன் பகிடி விடுகிறார். அரசுக்கு கடும் எச்சரிக்கை

எங்களுடைய மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

(“சம்பந்தன் பகிடி விடுகிறார். அரசுக்கு கடும் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் ஜெயந்தன் அணியைத் தேடி வேட்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது. அந்தப் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே, இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. ஜெயந்தன் படையணியைச் சேர்ந்தவர்களில் சிலர், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலேயே, நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தத்தரப்பு தெரிவித்துள்ளது. தங்களுடைய பொலிஸ் பிரிவில், சந்தேகத்துக்கு இடமானமுறையில் நடமாடுபவர்கள் மற்றும் புதிய நபர்கள் தென்பட்டால், அவ்வாறானவர்கள் தொடர்பில், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும், பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல்! 12 பேர் காயம்…600 பேர் வெளியேற்றம்!

(எஸ். ஹமீத்)

General view of the Mangle nightclub in Dalston, east London on Monday April 17, 2017. London police are investigating an acid attack at a London club that led to a mass evacuation with 12 people injured. Police said Monday April 17, 2017 that 12 people were treated at hospitals for burns. None of the injuries were said to be life-threatening. (Jack Hard/PA via AP)

கிழக்கு இலண்டனிலுள்ள ஒரு களியாட்ட விடுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் சக்தி வாய்ந்த அமிலம் விசிறப்பட்டதினால் சுமார் 12 பேர்வரை படுகாயங்களுக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல்! 12 பேர் காயம்…600 பேர் வெளியேற்றம்!” தொடர்ந்து வாசிக்க…)

சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதல்…

ரத்தச் சேற்றில் கோயம்புத்தூர், புள்ளாக்கவுண்டன்பாளையம்; நிராதரவாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள்…
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாக்கவுண்டன்புதூர் பகுதியில் சுமார் 30 தாழத்தப்பட்ட அருந்ததியர் சமூக குடும்பங்களும், 300க்கும் மேற்பட்ட ஆதிக்கச் சாதி கொங்கு வேளாளர் கவுண்டர் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

(“சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதல்…” தொடர்ந்து வாசிக்க…)

நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு

2014 ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 300 பள்ளி மாணவிகள் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்து இன்றுடன் மூன்றாண்டு நிறைவடைந்துவிட்டது.மாணவிகளை மீட்கக் கோரி தலைநகர் அபுஜாவில் சமூக ஆர்வலர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தலைநகர் அபுஜாவில் போராட்டமும் நடைபெற்றது.

(“நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)