அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை.

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்
தோற்றம் : 25 பெப்ரவரி 1933 — மறைவு : 2 சனவரி 2017

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுந்தரம்(சங்கீத பூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று, முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அப்பணிகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இந்தப் பணியை ஆரம்பித்தனர். “யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூறப்பட்டது.

(“மாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்’

வட மாகாண முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையர்கள் என, மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முஜிர்பு ரஹ்மான் தெரிவித்தார். வில்பத்து பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

(“‘வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்’” தொடர்ந்து வாசிக்க…)

‘பொது சோசலிஷக் கட்சி உருவாகும்’

நாட்டிலுள்ள அனைத்து சோசலிஷக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், ஒரு பொதுவான சோசலிஷக் கூட்டணியொன்றை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முன்னிலை சோசலிஷக் கட்சி தெரிவித்தது. இது தொடர்பாக திட்டமிடல் குறித்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று, சுகததாச விளையாட்டரங்களில் வைத்து தெரிவிக்கப்படும் என்று, குறித்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனதீர குணதிலக்க தெரிவித்தார்.

(“‘பொது சோசலிஷக் கட்சி உருவாகும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.கவை எதிர்த்து உறுதியாய் நிற்குமாறு சு.கவினருக்கு ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும், அரசாங்கத்தைக் கொண்டுநடத்தும் ஐக்கிய தேசியக் கட்சியால் மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிராக உறுதியாக இருக்குமாறு, பணித்துள்ளதாகத் தெரியவருகிறது.

(“ஐ.தே.கவை எதிர்த்து உறுதியாய் நிற்குமாறு சு.கவினருக்கு ஜனாதிபதி பணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ மார்க்சிய‌ FARC இய‌க்க‌ம்

கொல‌ம்பியா ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌த்தின் விளைவாக‌, ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ மார்க்சிய‌ FARC இய‌க்க‌ம், இனிமேல் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ இய‌ங்கும். இய‌க்க‌ப் போராளிக‌ள், த‌ம்மிட‌ம் உள்ள‌ ஆயுத‌ங்க‌ளை ஒப்ப‌டைத்து விட்டு இய‌ல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற‌ன‌ர். ஊர் திரும்பும் முன்னாள் போராளிக‌ள் பாதுகாப்பின்மையை உண‌ர்கின்ற‌ன‌ர். ப‌ல‌ருக்கு ம‌ர‌ண‌ அச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

(“ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ மார்க்சிய‌ FARC இய‌க்க‌ம்” தொடர்ந்து வாசிக்க…)

குழப்பங்களை வழங்குகிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு, இன்னமும் 3 வாரங்களுக்குக் குறைவான நாட்களே உள்ள நிலையில், சர்ச்சைக்குரியவரான ட்ரம்ப்பின் சர்ச்சைகள், குறைந்தபாடாக இல்லை. ட்ரம்ப் தெரிவான ஜனாதிபதித் தேர்தலில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக, ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது எனவும் ஐ.அமெரிக்க இணையத்தளங்களை ஹக் செய்தது எனவும், ஐ.அமெரிக்க புலனாய்வுத்துறையினர் வழங்கிய அறிக்கையையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த 35 பேரை, உளவுபார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியேற்றினார். இரண்டு சொத்துகளும் முடக்கப்பட்டன.

(“குழப்பங்களை வழங்குகிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

விலை போனார் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கு உதவி, ஒத்தாசை வழங்குவார் என்று புலம்பெயர் தமிழ் சமூக பிரதிநிதிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான தமிழ் பிரபலம் ஒருவர் இவ்விடயத்தில் இடை தரகராக செயற்பட்டு உள்ளார்.

(“விலை போனார் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 நாட்களுக்கு த.தே.கூ ஆராயும்

“எதிர்வரும் 9, 10, 11ஆம் திகதிகளில், நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவுள்ளோம். இதற்கமைய, 6ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி கலந்தாலோசிக்கவுள்ளோம்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், சுட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பில் கூடவுள்ளனர்.  தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ள இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புத் திட்டம், உப குழு அறிக்கை தொடர்பான மூன்று நாட்கள் விவாதம், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்கு கூடவுள்ள கலந்துரையாடலுக்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இக்கலந்துரையாடலில் நாம் நிச்சயம் கலந்துகொள்வோம்” என்றார்.

(“புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 நாட்களுக்கு த.தே.கூ ஆராயும்” தொடர்ந்து வாசிக்க…)