சென்னையில் தியாகிகள் தினம்.

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்று செயற்பட்ட நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் நடைபெற்ற பேராளர் மகாநாட்டில் எமது அமைப்பின் பெயர்களை பத்மநாபா மக்கள் முன்னணி என்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்றும் பெயர் மாற்றம் செய்தோம். வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட யதார்தங்களை கருத்தில் கொண்டு எமது மக்களின் விடிவிற்கான அரசியல் பாதையிற்கு தேவைப்படும் மாற்றத்தினை ஏற்படுத்hதியிருந்தோம் இந்த மகாநாட்டில். கடந்த 25 வருடங்களாக சென்னை புழல் முகாமில் தொடர்ந்தும் அகதிளாக வாழும் எமது மக்கள்இ தோழர்கள் வருடா வருடம் நினைவு கூரும் தியாகிகள் தின நிகழ்வும் இம்முறை தோழர் ஸ்ரானிஸ் தலமையில் நடைபெற்றது. தோழர் கல்யாசுந்தரத்தின் நினைவு நாளும் ஜுன் மாதம் 20 ம்திகதி நடைபெறுவதால் அவரின் வழிவந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் இவ்நிகழ்வை இணைந்தே ஒழுங்கு செய்திருந்தனர் வணக்க நிகழ்வுடன் ஆரம்பித் இந்த நிகழ்வு ஈழவிடுதலைக்காவும் மனித குல விடுதலைக்காகவும் தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்கள் மாற்று விடுதலை அமைப்பு போராளிகள் யாவருக்குமான ஒரு மரியாதை செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும் உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூரு முகமாக “தியாகிகள் தினம்” – 2016க்கான நிகழ்வுகள் இம்முறை மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

(தொடர்ந்து வாசிக்க…)

பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

 

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்.

(“பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச்சிலை யாழ். பொதுநூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.அன்னாரின் உருவச்சிலையினை இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். யாழ்.பொதுநூலக வளாகத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர்.

(“யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கத்துக்கு 6 வேண்டுமா, 2 வேண்டுமா: திகா கேள்வி

தேசிய அரசாங்கத்துக்கு, மலையகத்தின் சார்பில் ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அறுவர் வேண்டுமா அல்லது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமா என, தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

(“அரசாங்கத்துக்கு 6 வேண்டுமா, 2 வேண்டுமா: திகா கேள்வி” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தினம் 19.06.2016 மட்டக்களப்பு

 

பத்மநாபா மக்கள் முன்னணி

தமிழர் சமூக ஜன நாயகக் கட்சி (SDPT)

இடம் : போக்கஸ் மண்டபம்

(சென்றல் றோட், மட்டக்களப்பு)
காலம்: 19.06.2016 ஞயிற்றுக்கிழமை
மணி : காலை 9.30
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும்உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருவதற்காக “தியாகிகள் தினம்” 2016 இம்முறை மட்டக்களப்பில் நினைவு கூறுவதோடு.
இதுவரை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக செயற்பட்டுவந்த நாம் ” தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” எனும் புதிய கட்சிப்பெயரில் ” “பத்மநாபா மக்கள் முன்னணி” எனும் அமைப்பாகவும். அரசியல் ஆர்வமுள்ள சகலதரப்பினரையும் இணைத்துக்கொண்டு மக்கள் இயக்கமாக புதிய கட்சிப்பெயரில் செயற்படவுள்ளோம்.
இந் நிகழ்வில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி மற்றும் எமது வருங்கால செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமும், கலந்துரையாடலும் முன்னாள் வட/கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” இன் முக்கியஸ்தரும் அ.வரதராஜப்பெருமாள் உற்பட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நடைபெறவுள்ளது. போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்கள், சகோதர இயக்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு
பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” சார்பில் அழைக்கின்றோம்.