பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்கிய 7.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 150ஐத் தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில், 213.5 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்ததாக, ஐக்கிய அமெரிக்காவின் சூழலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இறந்தோர் எண்ணிக்கை 26 என அறிவிக்கப்பட்டது. இதில், தகார் மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில், 12 பெண் குழந்தைகள் இறந்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அறிவிக்கப்படுகின்றது.
(“குலுங்கியது ஆப்கானிஸ்தான்; உணர்ந்தன இந்தியா, பாகிஸ்தான்” தொடர்ந்து வாசிக்க…)