மாணவர் போராட்டத்தை மோசமாக எதிர் கொண்ட இலங்கை அரசு

தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல! ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. மாணவர் போராட்டதை இம்முறையில் எதிர் கொள்ளும் இலங்கை அரசு கண்டனத்திற்குரியது தமிழ் மாணவர்களே நீங்களும் நிச்சயமாக இந்தப் போராட்டதில் இணைய வேண்டும். இது எதிர்காலத்தில் நீங்கள் சம உரிமையுடன் இலங்கையில் வாழ வழிவகுக்கும்.

https://www.facebook.com/FreeEducationSL/videos/1375421535821359/