இலங்கை: கொரனா செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது. இது செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலாகும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

“வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” எச்சரிக்கை

முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்தியாதான் இராணுவ கூட்டாளி என அமெரிக்கா முடிவு செய்து விட்டது

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘சர்வதேச சட்டத்தை மீறும் கனடா’

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை கனடா மீறுவதாக, கனடா சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், சவுதிக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் இடைநிறுத்துமாறு கனடாவை அந்நாட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகின்றது. கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கமானது ஆயுதங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாக நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்  பேராசிரியர் சன்ன ஜெயசுமண,  ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிவரை நாட்டை முடக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (12) நடந்த ஊடக சந்திப்பில் பேசிய எஸ்.எம் மரிக்கார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாட்டில் உள்ள அபாயகரமான சூழ்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்த போதிலும் அரசாங்கம் ஏன் இன்னும் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு; இளைஞன் படுகாயம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

டோக்கியோ 2020 இல் கியூபா

ஆகஸ்ட் 8, 2021, ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை அளிக்கப்பட்டது. பெரும் தொற்றுக் காரணமாக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பல்வேறு மேடைகள் அமைக்கப்பட்டு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றன.

சுகாதார அமைச்சு கைமாறுகிறது?

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவராக  வலம் வருபவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரை அதிகமாகக் காணலாம். இந்நிலையில், நேற்றுக் காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் சென்னையிலுள்ள  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.