‘தலிபானுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘

தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப்  புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வெளிநாட்டு படைகளை எதிர்த்தும் கடந்த 20 வருட காலமாக போராடி வருகிறோம் என்று கூறினார்

போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.  ஜனாதிபதி  அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார்.  இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாற்றம்

நான்கு அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுக்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களே மாற்றப்படவுள்ளன.

ஆலய திருவிழாக்கள் நடத்த முற்றாக தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், பிரதேச மக்களுக்கான கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.

இலங்கை: கொரனா செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது. இது செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலாகும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

“வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” எச்சரிக்கை

முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்தியாதான் இராணுவ கூட்டாளி என அமெரிக்கா முடிவு செய்து விட்டது

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘சர்வதேச சட்டத்தை மீறும் கனடா’

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை கனடா மீறுவதாக, கனடா சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், சவுதிக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் இடைநிறுத்துமாறு கனடாவை அந்நாட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகின்றது. கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கமானது ஆயுதங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாக நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்  பேராசிரியர் சன்ன ஜெயசுமண,  ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிவரை நாட்டை முடக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (12) நடந்த ஊடக சந்திப்பில் பேசிய எஸ்.எம் மரிக்கார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாட்டில் உள்ள அபாயகரமான சூழ்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்த போதிலும் அரசாங்கம் ஏன் இன்னும் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.