வியட்நாமில் அமெரிக்கா

(Maniam Shanmugam)

அமெரிக்கா தனது வல்லாதிக்க கொள்கைகளை எதிர்ப்பவர்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு “மனித உரிமை மீறல்” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் எல்லோரும் அறிந்த சங்கதி.

சிறுமியின் மரண விசாரணை அறிக்கை கோரும் ஆளுநர்

பெரியகல்லாற்றில் சடலமாக மீட்கப்பட்ட 11 வயதுச் சிறுமியின் மரணத்துக்கான விசாரணையைத் துரிதமாக நடத்தி, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக்கொண்டார்.

மாகாணசபை தேர்தலுக்கு ரூ.4000 மில்லியன்?

மாகாணசபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டதன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறை குறித்து ஆராயப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்

பிரதான நகரங்கள், சில சந்திகளில் கம்பீரமாய் காட்சியளிக்கும் சிலைகளில் காகங்கள் எச்சமிட்டிருப்பதை பார்த்து பலரும் சிரித்திருப்பர். ஆனால், சிலைகளின் பின்னிருக்கும் வருத்தங்கள் தெரியாமலே போய்விடும். சிலைகளுக்குப் பின்னாலும் ஏதோவொரு வகையில் ‘இரத்தம் தோய்ந்த’ கதைகள் உண்டு.

கேரளாவில் ஊரடங்கின்போது, 2,868 குடும்ப வன்முறைகள்

திருவனந்தபுரம் :

கேரளாவில் ஊரடங்கு காலங்களில் சுமார் 2,868 குடும்ப வன்முறை தொடர்பான முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியு ள்ளன.

புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை.

அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம்

(மொஹமட் பாதுஷா)

அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முதல் கொரோனா தடுப்பூசி காப்புரிமை வழங்கிய சீனா

கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல.

‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது.