சாணத்தில் குளித்தல், சாணத்தை அள்ளி உடல்முழுவதும் தேய்த்துக்கொள்ளல், கோமியத்தைக் குடித்தல், அதில் நீராடுதல் தொடர்பிலான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள், இந்திய ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. சாணமும் கோமியமும் விஷகிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகளாகவே, முன்னைய காலங்களிலிருந்து பார்க்கப்படுகின்றன.
Category: Uncategorised
கே.ஆர்.கௌரி: பொதுவுடைமை நாயகி!
கேரளத்தின் உத்வேகமிக்க கம்யூனிஸ்ட் தலைவரான கே.ஆர்.கௌரி (102), முதுமை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக செவ்வாய் அன்று காலமானார். கேரளப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் குரல் கொடுத்த கௌரி, கேரளச் சட்டமன்றத்தில் அதிக காலம் பணியாற்றிய பெண் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தின் மிக வயதான பெண் உறுப்பினர், வயதான பெண் அமைச்சர், தேர்தல்களில் அதிக வெற்றியைப் பெற்றவர் எனப் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரர். கேரளம் இதுவரை பார்த்த திறமையான நிர்வாகிகளுள் ஒருவர்.
எம்பிக்கொரு நீதி ஏழைக்கொரு ஒரு நீதியா?
நேற்றைய தினம் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனின் பிரேத்தியேக செயலாளர் முரளி என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ள்ளார்.
அதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார்.
பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதிக்கு மணவாழ்க்கை கசந்தது
அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதியினர் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளனர். இதுதொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும். மிகப்பெரிய பணக்கார தம்பதியினர் மட்டுமன்றி மிகப்பெரிய நன்கொடையாளர்கள் தாங்கள் இருவரும் இனியும் திருமணவாழ்வில் முன்செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை: கொரனா செய்திகள்
பாலம் கல்யாணசுந்தரம்
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார். பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
சித்திரவதையின் உச்சம்
இந்த புகைப்படத்தைப் பார்த்தவு டன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது….படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம். 17 வருடங்கள் இஸ்ரேலிய சிறைச் சாலையில் கடும் சித்திரவதைக் கும், பலவந்த தனிமைபடுத்தலுக் கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.