நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) காலை கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணி கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு!
உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர்.
சொந்த நாட்டின் ஏதிலிகள்
வறுமை ஒழிப்பு புரட்சியை ஏற்படுத்திவரும் பசுமை இல்லம்
(வ. சக்திவேல்)
புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் வடக்கு-கிழக்கு முழுவதும் இயங்கிவரும், ‘பசுமை இல்லம்’ எனும் அமைப்பால் கொவிட் – 19 உக்கிரமடைந்துள்ள இக்காலத்தில், மக்கள் வீட்டிலிருக்கும்போது வீணாக பொழுதைக் கழிக்காமல், வீட்டுத் தோட்டப் பயிற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நல்லின பயிர் கன்றுகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.
’குழு நியமிக்கவும்: அதுவரை அமர்வுகளை புறக்கணிக்கவும்’
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை
(என்.கே. அஷோக்பரன்)
உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வாகனப் பிரசார பேரணி
தமிழர் பண்பாட்டின் வேர்களைத் தேடி
காந்திமதி
அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை… காந்திமதி.சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு காந்திமதிக்கு.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 8
(அ. வரதராஜா பெருமாள்)
முடியாட்சி வாரிசானாலும் சரி! தேர்தல்கள் வழியாகவாயினும் சரி!
ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் மன்னர்களே!
இலங்கையின் ஆட்சியாளர்கள் அரசின் நிதி நிர்வாகத்தை முறையாகவும் முழுமையாகவும் செயலாற்றலுடன் முகாமைத்துவம் செய்வது தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றகரமான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு மிகப் பிரதானமானது எனும் குறிப்பு கட்டுரைப் பகுதியில் கூறப்பட்டது. அவற்றை இங்கு சற்று விரிவாகப் பார்க்கலாம்.