’குழு நியமிக்கவும்: அதுவரை அமர்வுகளை புறக்கணிக்கவும்’

இத்தகைய விசாரணைக் குழுவை ஜனாதிபதி நியமிக்கும் வரை, அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமெனவும்,  கூறியுள்ளன.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே, அக்குடும்பங்கள் மேற்கண்டவாறு தெரிவித்தன.

அங்கு தொடர்ந்துரைத்த அக்குடும்பத்தினர், கைதிகளது நலன்களை பாதுகாக்கும் ஓர் இராஜாங்க அமைச்சராக இருந்தவாறாக, தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மீது தனது சகபாடிகள் சகிதம் மதுபோதையில் அதுவும் இரவு நேரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் அதிர்ச்சியை தந்துள்ளது என்றனர்.

‘அக்கும்பல் எமது பிள்ளைகளை தமது பாதணிகளை நாக்கினால் துப்புரவு செய்ய சொல்லியிருக்கின்றனர்.
‘எமது உறவுகளை உயிருடன் பாதுகாக்க முதலில் அவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றவேண்டும். அதற்கு முன்னதாக அவர்கள் தொடர்பிலான வழக்குகள்  உள்ள நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்தி நடந்தவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

‘கைதிகள் நீதிமன்ற விசாரணைகளுக்காகவே சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை நீதிமன்றங்களது கடமை: எனவும் தெரிவித்தனர்.
‘இதேவேளை, தமிழ்க் கட்சிகளது பிரதிநிதிகள் குழுவொன்று உடனடியாக நேரில் அநுராதபுரம் சிறைக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளது நலன்களை முதலில் கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.