கறுப்பு பட்டியலில் இருந்து இருவரின் பெயர் நீக்கம்

அந்தவகையில், ‘ரமேஷ்’ என்றழைக்கப்படும் நிக்லப்பிள்ளை ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோரின் பெயர்களே கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதேவேளை, ‘ரமேஷ்’ மீது இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக இருவரும் 2014 முதல் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.