நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும் இம்மாதம் 31 ஆம்திகதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
குளிக்கும் பனிக்குமிடையே; தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம்
இலங்கை: கொரனா செய்திகள்
1986 மார்கழி 13: ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு புலிகள் தடை விதித்த நாள்!
(தோழர் மோகன்)
தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும் தனி நபர்களுக்கும் பேசவும் எழுதவும் ஒன்றுகூடவும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர்.
நாளை முதல் ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தைவாய்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் விசேட வேலைத்திட்டமொன்று நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதிலிருந்து உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும் என, கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.