துண்டு பிரசுரங்களுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்த, மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் மீண்டும் இழுபறி

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று (27) மாலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று (28) நண்பகல் இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது அமையவுள்ளது. இதன்போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் இலங்கை ஜனாதிபதி ஈடுபடவுள்ளார் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது! இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன.

விளாமரம்

சிறுவயதில் “இது யானை தின்ற விளாம்பழம்” என்று பாரமற்ற விளாம்பழம் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்துக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கமுடியாத வயது. விளாத்தி இலைகளை ஆடுகள் சுவைத்து உண்பதைக் கண்டிருக்கிறேன். அவை எப்படி இலைகளுக்குள் மறைந்துள்ள முட்களைத் தவிர்க்கின்றன என்பது அதிசயம். விளாம்பழத்தின் காய் கொண்ட துவர்ப்பும், அதற்கு உப்பிட்டு உண்டதும், பழத்தைச் சீனி போட்டு உண்டதும் நினைவில் நிற்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடத்த தடை

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும், நடத்த கூடாது என, மாணவர்களுக்கு பல்கலைக்கிக நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.

அரசியலுக்கு விடைகொடுக்க தயாராகும் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

அரசியல் படிப்பினைகள்

(கருணாகரன்)

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகியிருக்கிறார். புதிய அமைச்சரவை ஒன்று பதவியேற்றுள்ளது. அதில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

வடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றார். அதன் பிரகாரம் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அதேநேரத்தில் அரசியல்வாதிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என்பதும் யாவரும் அறிந்தது.

கியூபா நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஆளுமை

அமெரிக்க வல்லரசை அரை நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்ற சிங்கம்

ஃபிடல் காஸ்ட்ரோவின் மூன்றாவது நினைவு தினம்

கியூபாவை ஒரு கட்சியால் ஆளப்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ.அவர் மறைந்து இன்றுடன் மூன்று வருடங்கள்.