இந்தியாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று (28) நண்பகல் இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது அமையவுள்ளது. இதன்போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் இலங்கை ஜனாதிபதி ஈடுபடவுள்ளார் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.