இலங்கையர்களுக்கு மட்டுமன்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி இருண்ட நாளாகவே அமையும். இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் கோரத்தில் இருந்து பலரும் இன்னும் விடுபடவில்லை. இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர்.