உங்களால் மறந்துவிடமுடியுமா அந்த நாளை?

(Rathan Chandrasekar)

2012 டெல்லியில் சினிமா பார்த்துவிட்டு நண்பனுடன் பேருந்தில் ஏறிய ஜோதிசிங் – 23 வயதான ஒரு பிஸியோதெரபிஸ்ட் – பேருந்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு ஆண்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி – கடுமையாகத் தாக்கப்பட்டு – சாலையோரத்தில் வீசப்பட்டாள்.

உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பேன் : ஜனாதிபதி

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். 

துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு – 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் துசித ஹல்லொலுவ நேற்று (30) கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா?  அது இன சௌஜன்யத்தை,  நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

ஐஸ், ஹெரோயினுடன் இளைஞன் கைது

சுன்னாகம் பகுதியில் 5 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சீரற்ற வானிலை: 8,000 பேர் பாதிப்பு

நிலவும் அடைமழையுடனான வானிலையால்  நாட்டின் 21 மாவட்டங்களில் 2,249 குடும்பங்களை சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு வரி : டிரம்ப் அதிரடி

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

மாகாணசபை தேர்தல்கள்

மாகாணசபை தேர்தல்கள்:(மாகாணசபை தேர்தல் தொடர்பாக இப்போது பலராலும் பேசப்படும் சமகால அரசியலில் வடகிழக்கில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் வேட்பாளராக போட்டியிட ஆசை உள்ளவர்களும் தமிழ்தேசிய அரசியல் பற்றாளர்களும் அறிவதற்காக எனது இந்த பதிவை இடுகிறேன்-பா.அரியநேத்திரன். பிடித்தவர்கள் பாருங்கள்)

அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு புதிய நெருக்கடி

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது கெடுபிடிகளை அதிகரித்து வரக்கூடிய சூழலில், தற்போது சீன மாணவர்களுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது.