அணை கட்டுவதே சிறந்த ‘விவசாயி’இன் பண்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் ஹிஷாலினி ஜுட் குமார், டயகமவைச் சேர்ந்த சிறுமி, கடந்த மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு, 12 நாள்களின் பின்னர் மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன்னர், தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்ததாக சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.