இலங்கையில் கல்வி முற்றிலும் குழப்பமாக உள்ளது என்பதை சகலரும் அறிவார்கள். அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.