இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவையை வழங்க அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத நபர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.