ஓகஸ்டில் மோடி வருகிறார்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஷ்டிரபதி பவனில் மோடியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியபோது, ​​இலங்கைக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பிரதமர் மோடியின் பயணம் குறித்து விக்கிரமசிங்க  புது டெல்லியில் திங்கட்கிழமை (10) கலந்துரையாடினார்.

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இருவரும் இந்திய தலைவரின் விஜயம் குறித்து கலந்துரையாடினர், இதன் போது இந்த விஜயம் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என தெரியவந்துள்ளது. ஜெய்சங்கர், விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும், இந்தியப் பிரதமரின் பயணம் குறித்து ஆராய்வதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்திருந்தார்.