திருகோணமலை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஏற்பாடு

அதன் அடிப்படையில் “சுபீட்சத்தின் நோக்கு”கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பசுமையான சமூக பொருளாதார கொள்கைக்கமைவாக,சேதன விவசாயத்தை ஊக்குவித்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்று(8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில்,அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின், தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள சேதனப்பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்து,அவர்களுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் ஏனைய வழிகாட்டுதல்களை வழங்கி,மாவட்டத்தின் கேள்விக் கேற்ற சேதனப்பசளையை, உள்ளூரிலே உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே, இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இக்கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட விவசாய பணிப்பாளர் கே.குகதாசன்,துறைசார் திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.