ஹரிணியை நிறுத்தவும் – ஹிருணிகா

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினரான  கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான  திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கோரியுள்ளார்.

சாதனை படைத்த சிறுவனுக்கு செந்தில் வாழ்த்து

பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.