
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
The Formula
எதியோப்பியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட் நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அச்சுறுத்தும் சக்திகளை பிரஜைகள் எதிர்க்க வேண்டும் என பிரதமர் அபி அஹ்மட் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி யாழ்ப்பாணம் றக்காவீதி இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் 28.10.2019 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
சம்பந்தரின் உள்வட்டத்தில் இருந்து கசிந்த ஓர் உண்மை
அண்மையில் ஒருநாள் சம்பந்தரிடம் அவரின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபர், சொல்லப்போனால் அவரை மையம் என்றும் கூறலாம். அவர் சம்பந்தரிடம் “ஏன் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 11 பேர் இருந்தும் ஏழு பேர் உள்ள முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தீர்கள்” என்று. அதற்கு அவர் நான் ஒன்றும் யோசனை இல்லாமல் இதைச் செய்யவில்லை, அதாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வந்தால் அவர் ஓர் பெரிய அரசியல்வாதி ஆகி கிழக்கு தமிழர்களுக்கான ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தி ஒரு பிரமுகராக, அரசியல் தலைவராக, அவர் வந்துவிடுவார். நாம் பின்னர் இருந்த இடம் தெரியாத பகல் வேளை நட்சத்திரங்களாக மறைந்துவிடுவோம்.