40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா: தமிழறிஞரின் மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தகவல்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

எதியோப்பியாவில் ஆர்ப்பாடங்கள்: ’உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்தது’

எதியோப்பியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட் நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அச்சுறுத்தும் சக்திகளை பிரஜைகள் எதிர்க்க வேண்டும் என பிரதமர் அபி அஹ்மட் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று சந்திரிகாவின் மாநாடு

‘அபி ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று (050 கொழும்பில் நடைபெறவுள்ளது.

யாழ் – சென்னைக்கு இடையில் வாரத்துக்கு மூன்று சேவைகள்

சென்னை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களுக்கு இடையில், வாரத்தில் மூன்று நாள்கள், அலையன்ஸ் எயார் நிறுவனம் விமான சேவைகளை 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அன்னத்துக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு, தமிழரசுக் கட்சி, ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்

பிரிட்டனில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி யாழ்ப்பாணம் றக்காவீதி இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் 28.10.2019 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

இராஜினாமா செய்தார் பிரதமர் ஹரிரி

லெபனானின் பிரதமர் பதவியிலிருந்து சாட் அல்-ஹரிரி, நேற்று இராஜினாமா செய்துள்ளார். ஆளும் உயர் மட்டம், நாட்டை ஆழமான பிரச்சினைக்குள் தள்ளுவதற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதில் தான் முடிவில்லா நிலையை அடைந்துள்ளதாக சாட் அல்-ஹரிரி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மிர்

இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் நாளை முதல் ஜம்மு காஷ்மிர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறவுள்ளது. துணை ஆளுநர்களாக பதவியேற்கவுள்ளனர்.

வெடித்ததை ஐயா ஒரு வெடிகுண்டு

சம்பந்தரின் உள்வட்டத்தில் இருந்து கசிந்த ஓர் உண்மை
அண்மையில் ஒருநாள் சம்பந்தரிடம் அவரின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபர், சொல்லப்போனால் அவரை மையம் என்றும் கூறலாம். அவர் சம்பந்தரிடம் “ஏன் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 11 பேர் இருந்தும் ஏழு பேர் உள்ள முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தீர்கள்” என்று. அதற்கு அவர் நான் ஒன்றும் யோசனை இல்லாமல் இதைச் செய்யவில்லை, அதாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வந்தால் அவர் ஓர் பெரிய அரசியல்வாதி ஆகி கிழக்கு தமிழர்களுக்கான ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தி ஒரு பிரமுகராக, அரசியல் தலைவராக, அவர் வந்துவிடுவார். நாம் பின்னர் இருந்த இடம் தெரியாத பகல் வேளை நட்சத்திரங்களாக மறைந்துவிடுவோம்.