அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றம் தொடரட்டும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இரண்டு வார காலமாக, நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம், நேற்று முன்தினம் (27) முடிவடைந்தது. அதில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அக்கூட்டத்துக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்ஸையும் சந்தித்து உரையாடினார். 

மோடியின் அமெரிக்க விஜயம், இந்தியாவில் வளமாக்க வழிவகுக்குமா?

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற முதலாவது குவேட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது அவுஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய சகாக்களுடன் அம்மாநாட்டில் கலந்துகொண்டார்.

தோழர் சுசீலா

(Rathan Chandrasekar)

கட்சி அரசியலிலிருந்து நான் தூர வந்தபிறகும் –
தம் சுய வாழ்வை பின்னிருத்தி –
ஒரு நம்பிக்கையின்பாற்பொருட்டு –
அதுவும், இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் – சமூகத்துக்கென இயங்கிக்கொண்டேயிருக்கும் மனிதர்கள் – வியப்புக்கும், மேலாக மரியாதைக்கும் உரியவர்களாக மனதுள் அமர்ந்துகொள்கிறார்கள்.

கனடியத் தேர்தல் நாள் இன்று

(சாகரன்)

உலகில் முதன்மைத் தொகை புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொண்டிருக்கும் கனடாவில் இன்று பொதுத் தேர்தல். கடந்த 2 வருடங்களாக சிறுபான்மை அரசாக செயற்பட்டு வந்த ஜஸ்ரின் ரூடோவின் லிபரல் கட்சியின் ஆட்சி அவர்களாலேயே வழமையான தேர்தல் காலத்திற்கு இரு வருடங்கள் முன்பே கலைக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் இது . கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாத காரணத்தால் பெரும்பான்மை பெற்ற இந்தக் கட்சி புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தனது ஆட்சி நடாத்தி வந்தது.

தமிழ் நாட்டின் புதிய கவனர்

தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி என்பவர் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரை எதற்காக திடீரென்று தமிழ் நாட்டுக்கு கவர்னராக நியமித்திருக்க முடியும் என்பதுதான் புரியவில்லை.

ஆப்கன் எழுப்பும் கேள்விகள்

ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, தாலிபான்களால் கெரில்லா போர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஒரு அரசாங்கத்தை நிறுவி அதனை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இதற்கு விடை காண்பதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதே வேளையில், பயங்கரவாதத்தால் ஒரு ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டு, மாறுபட்ட ஓர் அரசைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலானது, வருங்காலங்களில் இவ்வகையான அரசியல் முறைகள் அனைவருக்கும் ஏற்புடையதாகிவிடக் கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.

உறுதிமொழிகளை தலிபான்கள் காப்பாற்றுவார்களா?

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி வலைத்தளம் அதன் அபாயகரமான துருக்கி சோப் ஒப்பேரா மற்றும் இசை நிகழ்ச்சிகளை டேமர் நிகழ்ச்சியுடன் இணைத்துள்ளது. தலிபான்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை வெளியிட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் முன்மாதிரியான அணுகுமுறை

(மொஹமட் பாதுஷா)

ஒருகாலத்தில் நியூசிலாந்து என்றால் ‘முழுஆடைப் பால்மா’ ஞாபகத்துக்கு வரும். ஆனால், கடந்த சில வருடங்களாக, நியூசிலாந்து என்ற பெயரைக் கேட்டதும் கண்முன்னே வருவது, அந்நாட்டின் பிரதமரும் அவரது ஆளுகையுமாகத்தான் இருக்கும். 

வ.உ.சி. 150

ஆங்கிலேயர் அஞ்சிய எலும்புகள்

வ.உ.சி.க்கு எதிரான அரச நிந்தனை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து ஆங்கிலேய நீதிபதி ஏ.எஃப். பின்ஹே 1908 ஜூலை 7-ல் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ‘இவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தை ஊட்டும்…’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிக் குறிப்பிட்டதற்குக் காரணம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வ.உ.சி. உருவாக்கியிருந்த எழுச்சி.

ஆப்கானிஸ்தான்: திரும்பிப் பாருங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.