இறுதி அஞ்சலிக்காக லக்னோ சென்றார் பிரியங்கா

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில்  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாரதிய ஜனதா கட்சியினர்  சென்ற கார் மோதியது. இதில், விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர்  அஜய் மிஸ்ரா தனது பதவியை இராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய இணை அமைச்சர்   பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சூழலில் பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில்  கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லக்னோ வந்தடைந்தார் பிரியங்கா காந்தி .

மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம்

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயர், லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்படும் என நிதியத்தின் தற்போதைய தலைவரும் வர்த்தக அமைச்சருமான டொக்டர் பந்துல குணவர்தன, இன்று (12) தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, பல்கலைக்கழக கல்வி வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் நிதியத்தைத் தொடங்கிய மறைந்த வர்த்தக அமைச்சர் லலித் அதுலத்முதலிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பெயர் மாற்றம் இடம்பெறுவுள்ளதாகத் தெரிவித்தார்.

’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’

(விஜயரத்தினம் சரவணன்)

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மிகச் சிறந்த தோழரை இழந்து விட்டோம். சிரம் தாழ்த்தி செவ்வஞ்சலிகள்

தோழர் என வாஞ்சயுடன் என்னை அழைக்கும் தோழர் மோகன் சுப்பிரமணியம் நேற்று ( 07- 10-21) மௌனித்து விட்டார். தோட்டத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் மோகன் 1975 இல் செங்கொடி சங்கத்தில் உறுப்பினராக இணைந்தவுடன் தொழிலாளர் வர்க்க சிந்த பனையில் ஈடுபாடு கொண்டு மறைந்த தோழர் ஓ.ஏ.இராமையாவின் உற்ற தோழனாக செயற்பட ஆரம்பித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 490 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 526,873 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 402 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  480,499 ஆக அதிகரித்துள்ளது.

புலம்பெயர் தமிழர் சீனாவை நாடுவதாக இந்தியா கவலை

இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து  புலம்பெயர் தமிழர்கள்  சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக ஹிந்து செய்திப்பத்திரிகை செய்தி ​வெளியிட்டுள்ளது.   

கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கின் புதிய ஆளுநர் பதவியேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் பதவியேற்றார்.

தாய்வான் விரைவில் சீனாவுடன் இணையும்

தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்  நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சபதம் ஏற்றிருக்கிறார்.

பொருளியலுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜொஷ்வா டி அங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளியல் விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளதாக நோபல்  பரிசுக்குழு அறிவித்துள்ளது.