விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது எமது வடக்கின் அரசியல் களம். ஆடம்பரமான மேடை, கொடி, குடை, ஆலவட்டத்துடன் மேளதாள பவனியில் மேடையேறியவருக்கு கிரீடம் [அழகு ராணிகளுக்கு சூட்டும் பாணியில்] கையில் வேல் [வினைதீர்க்க வந்தவர் என்பதாலா?] அமைந்தது தமிழர் அரசு! என்ற உதயன் பத்திரிகை தலையங்கம், தீர்ந்தது எம் தாகம்! எனும் இறுமாப்புடன் அமைந்தது கைதடியில் வட மாகாண சபை. தேர்வு செய்த இடமே அதன் எதிர்காலம் பற்றி சூட்சுமமாய் ஒரு சேதி சொன்னது. எம் கடைசி காலத்தில், பேசிப் பேசியே காலத்தை கடத்தி ஓய்வெடுக்கும் பராமரிப்புடன் கூடிய வயோதிபர் மடம், மற்றும் நாட்டு வைத்தியம் [ ஆயுர்வேதம்] பார்க்கும் வைத்திய சாலை என்பன, ஏற்கனவே அமைந்த இடம் கைதடி. நாள்பட்ட நோய்க்கு எம்மவர் தேர்வு ஆயுர்வேதம். அதே போல் நீண்ட நெடிய தீராத எம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வந்த வட மாகாண சபை, அமைந்த இடமும் கைதடி. இருந்தும் நோய் தீரும் போல் தெரியவில்லை. அதேவேளை பராமரிப்புடன் கூடிய ஒய்வு பல உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது மட்டும் களநிலை. மக்களுக்கு என்ன கிடைத்தது, கிடைக்கும் என்ற கேள்விக்கு அவர்களின் பதில் Wait & See. [இறுதியில் அணில் ஏற விட்ட நாலு கால் நண்பர்களின் நிலையே மக்களுக்கு வரலாம்].
(“யார் குற்றினால் அரிசி ஆகும்?” தொடர்ந்து வாசிக்க…)