தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்

இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்;டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது. சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் மேய்ப்பர்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கிபிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது.

(“தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)

அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன.

(“அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை” தொடர்ந்து வாசிக்க…)

அய்யாத்துரை! அப்புகாமி! அபூபக்கர்! அந்தோனி! தீர்வு எப்போது?

விஜயன் வரவுக்கு முன்பு இலங்கை தீவின் மூத்தகுடிகள், யக்கர் நாகர் என வரலாறு கூறிப்பிடும் அதேவேளை, யாழ்பாடி வெகுமதியாய் பெற்ற வட பகுதியில் வாழ்ந்தவர், தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், அங்கு அய்யாத்துரை முதன்மை பெறுகிறார். பின் தெற்கில் விஜயன் கரை ஒதுங்கி குவேனியை கரம் பற்றி உருவான, சிங்கள இனத்தில் அப்புகாமி உதயமானார், கடல் வணிகம் செய்து வந்த அரேபியர், காலி துறைமுகத்தில் கரை ஒதுங்கியதும், அவர்கள் வழிவந்த அபூபக்கர் தன் காலடி பதித்தார். நாடு பிடிக்க அலைந்த போத்துகீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் வரவின் பின் மதம் மாறியவர் சூசை, அல்பேட், அந்தோனி ஆகினர்.

(“அய்யாத்துரை! அப்புகாமி! அபூபக்கர்! அந்தோனி! தீர்வு எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

“சுதந்திர இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் கீழ்வெண்மணி”

இப்படி ஒரு அநாகரிகமான சமூகத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போதொல்லாம் நெஞ்சம் பதறுகிறது, அந்த ஆற்றொணா துயரை எப்படி மறக்கமுடியும் சாணிப்பாலையும் அந்த சவுக்கடியையும் அரைப்படி அரிசி அதிகம் கேட்டவன் மீது நிகழ்திய கோரத்தையும் கருகிய முத்துக்களையும், அன்றே மாண்டுவிட்டது மனித நேயம் .டிசம்பர் 25.

“கீழ்வெண்மணி”

(டிசம்பர் 25 , 1968)
வர்க்கப் புரட்சியின் அடையாளம்
சொந்த நிலத்தையும்
சொந்த நலத்தையும்
ஆண்டைகளிடம் பறிகொடுத்தது …

(““கீழ்வெண்மணி”” தொடர்ந்து வாசிக்க…)

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?

(1968 டிசம்பர் – 1980. டிசம்பர் வரை)

“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,
´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

(“கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 89 )

இந்திய செஞ்சிலுவை சங்க வரவைத் தொடர்ந்து இந்திய இராணுவமும் வந்திறங்கியது.உணவு விநியோகத்துக்கு பொறுப்பான அதிகாரி என்பதால் இந்திய செஞ்சிலுவை சங்கதிகாரிகள்,இந்திய இராணுவ தளபதிகள் ஆகியோரின் தொடர்புகள் மூலமாக அறிமுகங்களும் கிடைத்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 89 )” தொடர்ந்து வாசிக்க…)

ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி

ருமேனியா நாட்டின் கடைசி கம்யூனிஸ்ட் தலைவர் நிகோலா ஸௌசெஸ்கு, ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 december 1989) அவரது துணைவியார் எலேனாவுடன் படுகொலை செய்யப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே அது இடம்பெற்றது. அமெரிக்காவினால் ஆதரிக்கப் பட்ட சதிப்புரட்சியாளர்கள், வெளிப்படையான நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொன்றனர்.

(“ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி” தொடர்ந்து வாசிக்க…)

‘3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்’

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 3 மாதத்துக்கு, புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் பிரதான ஓடுபாதையானது, எதிர்வரும் 3 மாதங்களுக்கு, காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரையான 8 மணிநேரம் வரையான காலப்பகுதிக்கு மூடப்பட்டிருக்கும் என்று அவர் அறிவித்தார்.

(“‘3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் கொலை வழக்கு: சகலரும் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் சபை சற்று முன்னர் அறிவித்தது. தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார். அதன் பின்னர் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் தீர்ப்பை நள்ளிரவு 12.20க்கு அறிவித்தனர். அதன் பிரகாரம், குற்றஞ்சாட்டப்பட்ட சகலரும் விடுதலை செய்யப்பட்டனர். அதாவது, 3ஆம், 4ஆம், 5ஆம்,6ஆம் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதோடு, பிரசன்னமாயிருக்காத 1ஆம், 2ஆம் பிரதிவாதிகளையும் விடுவித்துள்ளது.