குறைந்தது 50 ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று மியான்மாரின் பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதாக செய்தியறிக்கைகளும், சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் தெரிவித்துள்ளனர். அந்தமான் கடலில் தத்தளிக்கும் படகிலுள்ள 81 றோகிஞ்சாக்கள் குறித்து தகவலை வழங்க இந்தியா, பங்களாதேஷ், மியான்மார் தவறியுள்ளதாக, இந்தியாவைத் தளமாகக் கொண்ட, அந்நாட்டுத் தலைநகரிலுள்ள றோகிஞ்சா மனித உரிமைகள் முன்னெடுப்பு நேற்றுத் தெரிவித்துள்ளது.