Tim Hortons heirs cut paid breaks and worker benefits after minimum wage hike, employees say

Employees at an Ontario Tim Hortons owned by the children of the chain’s founders say they have been told to sign a document acknowledging they are losing paid breaks, paid benefits, and other incentives as a result of the province’s minimum wage hike.

(“Tim Hortons heirs cut paid breaks and worker benefits after minimum wage hike, employees say” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து வருகின்ற முதலமைச்சர், அந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராந்தம் பதிலளித்து வருகின்றார். அது, கேள்வி- பதில் அறிக்கையாக வெளியாகி வருகின்றது.

(“விக்னேஸ்வரனின் தடுமாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

குயிலின் கானத்தை கேட்க முடியாது !

 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.

(“குயிலின் கானத்தை கேட்க முடியாது !” தொடர்ந்து வாசிக்க…)

எச்சரிக்கை

(கருணாகரன்)

கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம், பாடசாலைகளிலும் கல்வி நிர்வாகத்திலும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே! கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு பிரதான பாடசாலைகளின் மாணவர்கள் வெளிப்படையாகவே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பல பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் ஈடுபட்டனர்.

(“எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பஸ் நிலைய விவகாரம்: ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை, சேவைகளை முன்னெடுக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் உத்திரவிட்டமையைக் கண்டித்து, வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், இன்று (01) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

(“பஸ் நிலைய விவகாரம்: ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி காரணமல்ல

கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணச் சம்பவங்களுக்கு, அமானுசிய சக்திகள் காரணமல்லவென அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, அம்மாகாணத்தில் பரவி வரும் நோயொன்று காரணமாகவே, இம்மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

(“வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி காரணமல்ல” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றில் இன்று: ஜனவரி 01

1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.

1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.

1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.

1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.

1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்துக்கு பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.

1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.

1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.

1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.

1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.

2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.

2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.

2008: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.

2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.