இலங்கைக்கு சர்வதேச சவால்

(மேனகா மூக்காண்டி)

சர்வதேச ரீதியில் பாரியதொரு சவாலுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்துவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் – ஜெனீவா நகரில் இன்று திங்கட்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இலங்கை பாதுகாப்புப் படையினராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, இம்முறை பேரவை கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அமர்வு, இலங்கைக்கு பாரியதொரு சவாலாக மாறியுள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை இம்மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நிலையில், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இலங்கை பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்றே அவ்வறிக்கையின் பிரதியொன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(“இலங்கைக்கு சர்வதேச சவால்” தொடர்ந்து வாசிக்க…)

கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை

இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில்; இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரி சர்வதேச ரீதியில் பாரிய பிரசாரத்தை மீண்டும் முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக பிரித்தானியாவின் செனல் 4 நிறுவனத்தின் யுத்த சூனிய வலயம் எனும் திரைப்படத்தை தயாரித்த கலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர் மற்றுமொரு திரைப்படத்தை வெளியிட தயாராகி வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமர் ரணில் இன்று இந்தியா பயணம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவாரெனத் தெரிய வருகிறது. பிரதமரின் இவ்விஜயத்தின் நிமித்தம் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வ நட்புறவை முன்னிலைப்படுத்தும் அடையாளமாக இம்முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த இம்மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலவிவரும் நட்புறவை வலுப்படுத்தி பிராந்திய சமாதானத்தையும் நல் லிணக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து இப்பேச்சுவார்த் தைகளின் போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது

புலம் பெயர் தமிழர்களுக்கு போர் என்பது பொழுதுபோக்கு”

மெல்பன் நகரில் வாழும் எழுத்தாளர் ஜேகே அவர்கள் கம்பன் கழகம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தார். பதிலுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் ஜேகே அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நமது செய்தியாளரிடமும் பேசினார். அதில் பல கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்: புலம் பெயர் தமிழர்களுக்கு போர் என்பது பொழுதுபோக்கு; போரை இன்னும் நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள்; பாதுகாப்பாக இருந்துகொண்டு போர் சூழலை வளர்க்க நினைக்கின்றார்கள்; புலம் பெயர் தமிழர்கள் இலங்கை தமிழ் மக்கள் விஷயத்தில் ஈடுபட ஒரு எல்லை உண்டு என்னுடைய திறமைக்கு புலம்பெயர் தமிழர்கள் பணத்தை விலையாக வைக்கும்போது நான் கொஞ்சம் ஆணவப்படவேண்டியுள்ளது.

பிரிட்டிஷ் லேபர் கட்சித் தலைவர் ஜெரேமி கொர்பைன் ஒரு சோஷலிஸ்ட்!

(Kalaiyarasan Tha)
பிரிட்டிஷ் லேபர் கட்சித் தலைவருக்கான தேர்தலில், ஜெரேமி கொர்பைன் அறுபது சதவீத வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பெரும்பாலும் இளையதலைமுறை லேபர் கட்சி உறுப்பினர்கள் அவரை ஆதரிக்கின்றனர். ஜெரேமி கொர்பைனின் வெற்றி பற்றிய தகவலை, வலதுசாரி தமிழ் ஊடகங்களும், வலதுசாரி தமிழ் இணைய ஆர்வலர்களும் இருட்டடிப்பு செய்தால், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. லேபர் கட்சித் தேர்தலில், ஜெரேமி கொர்பைன் போட்டியிடும் பொழுதே, முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். என்ன காரணம்? ஜெரேமி கொர்பைன் ஒரு சோஷலிஸ்ட்! இடதுசாரி பொருளாதாரக் கொள்கையை அமுல் படுத்தப் போவதாக வெளிப்படையாக பேசி வருபவர்! ஜெரேமி கொர்பைன் உண்மையான சோஷலிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது அரசியல்-பொருளாதார கொள்கைகள், பிரிட்டனைப் பொறுத்தவரையில் “தீவிர இடதுசாரித் தன்மை” கொண்டவை. ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, “முதலாளித்துவத்தின் தாயகமான” பிரிட்டனில் இடதுசாரி அலை வீசுவது குறிப்பிடத் தக்க விடயம். நமது தமிழ் வலதுசாரி ஊடகங்கள் இந்தத் தகவலை சுய தணிக்கை செய்து கொண்டதற்கும் அது தான் காரணம்.

சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சப்றா பினான்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனம் இந்த சரவணபவனுக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் அதி கூடுதலான வட்டி தருகிறோம் என்று சொல்லி, யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை தனது நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்யும்படி கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் இறங்கியது. அதை நம்பிய யாழ் குடாநாட்டு மக்கள், தமது பிற்கால சீவியத்திற்காக வைத்திருந்த பணம், தமது பிள்ளைகளின் சீதனத்துக்காக வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் சப்றா ஃபினான்ஸில் வைப்புச் செய்தனர்.

(“சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3

(மாதவன் சஞ்சயன்)

டக்ளஸ் கருணா இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்ப்பட முடியவில்லை. காரணம் டக்ளசின் குணாம்சம். யாருடன் இணைந்தாலும் நான் தான் தலைவன் என்ற போக்கு. கூட்டமைப்பில் தான் இருந்திருந்தால் நான் தான் தலைமை ஏற்றிருப்பேன் என அடிக்கடி பீத்திக்கொள்வார். தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து சுப்ரபாதம் கேட்டு சுகம் காண்பவர். பிரேமதாச முதல் மகிந்தவரையும் இன்று மைத்திரியுடனும் அவர்களின் மகுடிக்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர். கருணா போராளி மட்டுமல்ல பல களங்களை கண்டவர், முன்னின்று நடத்தியவர். எனது ஜயசிக்குறு வெற்றிக்கு இவர்தான் காரணம் என பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனால் பாராட்டப்பட்டவர். இன்று தான் இருக்கும் கட்சியையே சிங்கள பேரினவாத கட்சி என பேட்டி கொடுக்கும் தைரியம் கொண்டவர். கிழக்கின் அபிவிருத்தியில் இயக்கத்தில் இருந்த போதும் பின் அரசில் இணைந்த போதும் அக்கறைப்பட்டவர். இயக்ககாலத்தில் ஆயித்தியமலையில் அவர் அமைத்த அரிசி ஆலை வன்னிப் புலியை வியக்கவைத்தது.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3” தொடர்ந்து வாசிக்க…)

விக்கியை பதவியிலிருந்து நீக்க கூட்டமைப்பு முயற்சி

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்காத வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு கூட்டமைப்பினர் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படாததுடன் கூட்டமைப்பின் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரை பதவி விலக்குவது குறித்து கூட்டமைப்புக்குள் தீவிரமாக ஆராயப்படுவதாகத் தெரிய வருகிறது. அதேநேரம் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபை யொன்றின் முதலமைச்சருக்கு எதிராக எவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத் தைக் கொண்டுவர முடியாதென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

(“விக்கியை பதவியிலிருந்து நீக்க கூட்டமைப்பு முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

இன்னமும் உயிர்வாழ்கின்றதா?

நாடு கடந்த தமிழீழம்

சுவிசிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதி பூண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள். ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் சனநாயகப் பேராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகள், மக்கள் முன்னாலான அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதனொரு அங்கமாக லண்டனிலும் சுவிசிலும் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பத்திரத்தினை மக்கள் முன் பெற்றுக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை மக்கள் முன் வெளிப்படுத்தி நின்றனர். தேர்வாகியுள்ள பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுக்கு உறுதுணையாக நின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்துமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சுவிஸ் நிகழ்வில் இணைவழிப் பரிவர்தனையூடாக இணைந்து கொண்டு மக்களிடம் கோரியிருந்தார். இதேவேளை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதனை அனைத்துல அரங்கில் நிறுவுவதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்பாடெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டமை உரிமை வழங்கலாகக் கொள்வதா, தென் பகுதி அரசியலில் புதிதாகக் காணப்படும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வதா அல்லது தென் பகுதி அரசியலில் இடம்பெற்று வரும் அரசியல் சதுரங்கத்தின் ஓர் அம்சமா என்பது இப்போதைக்குத் தெளிவாகவில்லை. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இது நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் கொள்ளலாம்.

(“அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?” தொடர்ந்து வாசிக்க…)