கடாபியின் மறுபக்கம்……

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

(“கடாபியின் மறுபக்கம்……” தொடர்ந்து வாசிக்க…)

பிரச்சினையை பெரிதுபடுத்தி சிலர் குளிர்காய முனைகின்றனர் – முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

 

கட்சிக்குள் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சாதாரண விடயமென்றும், அதனை ஒருசில சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் பெரிதுபடுத்தி அதில் குளிர்காய முனைவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின்போது முதலமைச்சர் நடந்துகொண்ட விதம், குறிப்பாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து கட்சிக்குள் கடந்த நாட்களாக பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் தெரிவித்தபோதே, இவ்வாறு குறிப்பிட்டார்.

(“பிரச்சினையை பெரிதுபடுத்தி சிலர் குளிர்காய முனைகின்றனர் – முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 4

(மாதவன் சஞ்சயன்)

கருணா தன் குடும்பம் வாழும் வெளிநாட்டில் அவர்களுடன் இணைந்தாலும் நிம்மதியாக காலத்தை செலவிட புலத்து புலி பினாமிகள் விடாது. ஏதாவது குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பர். டக்ளசின் நிலை அதை விட மோசம். எந்த குடும்பத்துடன் போவது என்பது முதலாவது பிரச்சனை. மேலும் அவருக்காக தேர்தல் காலங்களில் பறந்து வரும் பறவைகள் கூட அவரை கௌரவமாக காப்பாற்ற முடியாது. விடாது கறுப்பு என்பது போல சூளை மேடு வழக்கு அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கலாம். அதனால் இருவரின் இருப்பும் இங்குதான். தம் இருப்புக்காக தேர்தல் காவடி தூக்கித்தான் ஆகவேண்டும். கருணா அதற்கான வழிகளை தேடிக்கொண்டிருக்க டக்ளஸ் தன் கட்சி இழப்புக்கான பழியை கட்சி உறுப்பினர்கள் மீது போட தொடங்கிவிட்டார். தொலைக்காட்சி பேட்டியில் மட்டுமல்ல அண்மையில் அவர் நடத்திய கிளிநொச்சி சந்திப்பிலும் உங்கள் உழைப்பு போதாது என பழி போட்டதால் மனம் நொந்துபோன பலர் முணு முணுத்தது ஜே வி பி இணையத்துக்கு தீனியாக “விலகுகிறார் சந்திரகுமார்” என செய்தி போட்டுள்ளது.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 4” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் – மஹிந்த இரகசியச் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள ‘சண் அன்ட் ஃபண்’ ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு வைத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இச்சந்திப்பைத் தவிர, வேறுபல இரகசிய அரசியல் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை.

இனப் படுகொலை செய்தது யார்?

2009ல் முல்லைத்தீவுப் பகுதியில் மக்களைக் கேடயங்களாகப் பாவித்து புலிகள் தாம் தப்புவதற்கு சமயம் பார்த்துக் காத்திருந்த நாட்களில்……
புலம்பெயர்ந்து வந்த தேசங்களில், புலித் தேசியங்கள், தெரு மறிப்புப் போராட்டங்கள் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாள் தற்செயலாக நான் ஒரு புலிப் பிரமுகரை சந்தித்தேன். போராட்டத்துக்கு ஏன் வருவதில்லை? என என்னிடம் கேட்டார். என்ன காரணத்துக்க இந்தப் போராட்டம் செய்கிறீர்கள்? என அவரிடம் வினவினேன்.
‘மக்கள் கொல்லப்படுகிறார்கள். மக்களை காப்பாற்றுவதற்காகத் தான் போராட்டம் நடத்தப்படுகிறது.’ என கூறினார். மக்களைத் தடுத்து வைக்காமல், அவர்களை விடுவிக்கும்படி புலிகளிடம் கூறுங்கள். மக்கள் கொல்லப்பட மாட்டார்கள். புலிகள் மக்களை தடுத்து வைத்திருப்பதை முதலில் கண்டியுங்கள் என அவரிடம் கூறினேன்.
அதற்கு அந்தப் புலிப் பிரமுகர் கூறிய பதில் எனக்கு வியப்பையும், விசனத்தையும் அளித்தது. அவர் கூறியது சனத்தைப் போக விட்டுட்டுப் பொடியள் என்ன செய்யிறது………?

இணைந்து செயற்பட சீனா விருப்பம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க சீனா தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஸியாங்லியாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடல் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பை வழங்க சீனா விருப்பத்துடன் உள்ளதாகவும் அவர் கூறிள்ளார். கடந்த 10 வருடங்களில் சுமார் 10,000 இலங்கையர்களை விஞ்ஞானம், முகாமைத்துவம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சீனா பயிற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், 2015ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,000 இலங்கையர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் சீனாவில் கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச சவால்

(மேனகா மூக்காண்டி)

சர்வதேச ரீதியில் பாரியதொரு சவாலுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்துவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் – ஜெனீவா நகரில் இன்று திங்கட்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இலங்கை பாதுகாப்புப் படையினராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, இம்முறை பேரவை கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அமர்வு, இலங்கைக்கு பாரியதொரு சவாலாக மாறியுள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை இம்மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நிலையில், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இலங்கை பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்றே அவ்வறிக்கையின் பிரதியொன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(“இலங்கைக்கு சர்வதேச சவால்” தொடர்ந்து வாசிக்க…)

கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை

இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில்; இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரி சர்வதேச ரீதியில் பாரிய பிரசாரத்தை மீண்டும் முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக பிரித்தானியாவின் செனல் 4 நிறுவனத்தின் யுத்த சூனிய வலயம் எனும் திரைப்படத்தை தயாரித்த கலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர் மற்றுமொரு திரைப்படத்தை வெளியிட தயாராகி வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமர் ரணில் இன்று இந்தியா பயணம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவாரெனத் தெரிய வருகிறது. பிரதமரின் இவ்விஜயத்தின் நிமித்தம் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வ நட்புறவை முன்னிலைப்படுத்தும் அடையாளமாக இம்முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த இம்மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலவிவரும் நட்புறவை வலுப்படுத்தி பிராந்திய சமாதானத்தையும் நல் லிணக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து இப்பேச்சுவார்த் தைகளின் போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது

புலம் பெயர் தமிழர்களுக்கு போர் என்பது பொழுதுபோக்கு”

மெல்பன் நகரில் வாழும் எழுத்தாளர் ஜேகே அவர்கள் கம்பன் கழகம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தார். பதிலுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் ஜேகே அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நமது செய்தியாளரிடமும் பேசினார். அதில் பல கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்: புலம் பெயர் தமிழர்களுக்கு போர் என்பது பொழுதுபோக்கு; போரை இன்னும் நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள்; பாதுகாப்பாக இருந்துகொண்டு போர் சூழலை வளர்க்க நினைக்கின்றார்கள்; புலம் பெயர் தமிழர்கள் இலங்கை தமிழ் மக்கள் விஷயத்தில் ஈடுபட ஒரு எல்லை உண்டு என்னுடைய திறமைக்கு புலம்பெயர் தமிழர்கள் பணத்தை விலையாக வைக்கும்போது நான் கொஞ்சம் ஆணவப்படவேண்டியுள்ளது.