ஐ.நாவின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவானார்

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் என்டனியோ கட்ரெஸ், தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது, அடுத்த செயலாளர் நாயகமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய, ஐ.நா. பொதுச் செயலாளரான பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன்பின்னர், புதிய செயலாளர் பதவியேற்பார்.