இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்த முடிவுக்கு த.தே.கூட்டமைப்பு பாராட்டு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. பொதுநலவாய நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணை யாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பு விசாரணையாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறி முறையொன்றை இலங் கையில் உருவாக்கி சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் நீதிக்கு கிடைத்த வெற்றியென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நல்லிணக்கம் என்ற நீண்டபயணத்தை ஆரம்பிப்பதற்கான பலமான சூழலை ஏற்படுத்தும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 4: தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி.

சிவத்தம்பி ஐயா என் அயலவர். என் முதற்கவிதை தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினர். கொழும்பில் பல தடவைகள்
அவர் வீடுபோய் பேசியிருக்கிறேன்.  ஒரு நடிகனுக்குரிய Resonant குரல் அவருடையது. அவர் ஒரு நல்ல நாடக நடிகனும். அவரது மிகப்பெரும் பலமாக நான் கருதுவது அவரின் Resonant voice தான். ( U tube ல் அவரின் குரலை கேட்டு பாருங்கள் சொக்கிப்போய்விடுவீர்கள்.) ஐயா பாதி அப்பாவி, மீதி ராஜ தந்திரி. கைலாசபதி போல ஐயாவிடம் பொம்புளைக் களவுபோன்றவை இல்லை. ஐயாவுக்கு தனது பணக்கார மனைவி ருபா அம்மாவில் பயம்.

(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 4: தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி.” தொடர்ந்து வாசிக்க…)

“நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!” – போப்பாண்டவர் பிரான்சிஸ்

“நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!”- அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது. அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் “இடதுசாரி” என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக “லிபரல்” என்று தான் அழைப்பார்கள்.

புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் !

விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றங்கள் குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதி முறைமையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் உள்நாட்டு நிபுணர்களாலேயே இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும், படையினரின் கௌரவம் பாதுகாக்கப்படுகின்ற வகையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்ற வகையிலும் இந்த விசாரணைகள் அமையவேண்டும், இந்த விடயம் குறித்து தேசிய கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும், இறுதிமுடிவை பாராளுமன்றே எடுக்கவேண்டும், விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்,
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்து கலப்புநீதிமன்றத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளை பூமியைக் கடக்கும் ராட்சத விண்கலம்.. மனிதகுலமே அழியும் என பீதி.. மறுக்கிறது நாசா

ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்தில்லை என அது விளக்கமளித்துள்ளது. சுமார் 270 மீ சுற்றளவுடைய 2012 டிடி5 என்ற ராட்சத விண்கல்லானது நாளை பூமியிலிருந்து 50 லட்சம் மைல் தொலைவில் கடக்க இருக்கிறது.
இதனால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த விண்கல் குறித்து ஏற்கனவே பல்வேறு பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. மோதினால் பூமி அழியும் இந்த விண்கல் பூமி மீது மோதப் போகிறது. அப்படி மோதினால், பூமியே அழிந்து விடும். மனித குலமே மண்ணாகப் போகிறது என்று தகவல் பரவி உள்ளது. இதனால், சில நாடுகளில் மக்கள் அழிவிற்கு ஆயத்தமாகத் தொடங்கி விட்டனர். கடைசி கடைசியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மக்கள் மன நிலை போய் விட்டது. உண்மைதான், ஆனால் அழியாது இந்நிலையில், இந்த விண்கல் நாளை பூமியைக் கடக்கப் போவது உண்மை தான், ஆனா அதனால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அப்படியேதான் இருப்போம் இந்த விண்கல் பூமியைக் கடந்த பின்னரும் கூட பூமி அப்படியேதான் இருக்கும். நாம் தொடர்ந்து நல்லபடியாக இருப்போம் என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.
கடவுள் துகள் ஆய்வகத்தால் ஆபத்தா? அதேசமயம், கடவுள் துகள் குறித்த கண்டுபிடிப்புக்காக உருவாக்கப்பட்ட லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர், தனது ஈர்ப்பு சக்தி காரணமாக மிகப் பெரிய விண்கல்லை பூமியை நோக்கி இழுக்கப் போவதாகவும் ஒரு பீதி கிளம்பியுள்ளது. ஆனால் இதையும் நாசா மறுத்துள்ளது

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ?

(மாதவன் சஞ்சயன்)

கல்லூரி நாட்களில் கல்விச் சுற்றுலா காதல் சுற்றுலாவாக மாறுவது போல, கடந்த சில வாரங்களாக அமைந்து விட்ட எனது தல சுற்றுலா, தகவல் சுற்றுலாவாக மாறிவிட்டது. பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட கதிர்காமம் வரை புண்ணியம் தேடச் சென்ற எனக்கு தலைவரின் பாவச் செயல்களை அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழைக்கு குழி தோண்ட அதில் எச்சங்கள் கிடைத்தது போல அருள் வாங்க சென்ற எனக்கு முக்கியமானவரின் அசிங்கமான பின்னணி பற்றி அவர் பதவியில் இருக்கும் வரை கூறாதவர் அவரின் சரிவினால் கூற முன் வந்தனர். தன் இரகசிய குடும்பத்தை சிங்கப்பூரில் சந்திக்கும் அவரின் முன்னாள் நெருக்கமான மற்ற உறவுகளில் ஒன்று மகாதேவா என துறவு வாழ்வு வாழ்வது வரை கேள்விப்பட்ட செய்திகளை எழுதுவதற்கு முன் இன்றைய அரசியல் நிலையை பார்ப்போம்.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ?” தொடர்ந்து வாசிக்க…)

சமூகத்தின் விடிவுக்காக அரசியல் செய்வோம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வாழ்த்து!

முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக அரசியல் என்கிற படகில் பயணித்து அவரையே தியாகம் செய்தவர் தேசிய தலைவர் மர்ஹூம் ஏ. எச். எம் அஷ்ரஃப் அவர்கள், இவருடைய அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், மனிதாபிமானம், சாணக்கியம் ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் அரசியல் தலைமை செயற்பட வேண்டும் என இன்றைய தியாகத் திருநாளில் வாழ்த்துகின்றார் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி. உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைச் சட்டமாக இஸ்லாமிய சமய மார்க்கம் உள்ளது, ஈகை, தியாகம் ஆகிய உயரிய மனிதப் பண்புகள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு அம்சங்களாக விளங்குகின்றன, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை இவற்றுக்கு முன்னுதாரணமாக உள்ளது, இதனால்தான் முஸ்லிம்கள் அனைவரும் ஈகைப் பெருநாளையும், தியாகத் திருநாளையும் தவறாமல் கொண்டாடுகின்றனர், ஸ்ரீலங்கா முஸ்லிம்களை பொறுத்த வரை ஈகை, தியாகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அரசியல் வழிகாட்டி அஷ்ரப் அவர்கள் விளங்குகின்றார் என்று ஹஜ்ச் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ள இவர் தேசிய தலைவர் அஷ்ரப் அவர்களின் ஈகை, தியாகம் ஆகியவற்றை அரசியல் தலைமை ஒருபோதும் மறக்கவோ, மரிக்கச் செய்யவோ கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்

புனித மக்காவுக்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 717ற்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர். 805ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. புனித மக்காவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மினா நகரிலேயே இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையர் எவரும் பாதிக்க ப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லையென சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

(“மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் மாவட்டத்தில் இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகையில் காலை ஈடுபட்டனர். இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பெருநாள் தொழுகை திறந்த வெளியரங்கு உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.இதன் போது மார்க்க சொற்பொழிவு மற்றும் தொழுகை மௌலவி பைசர் மதனி தலைமையில் மேற்கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அடுத்து யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் மற்றுமொரு பெருநாள் தொழுகைகாலை7மணியளவில்ஆரம்பமானது.இத்தொழுகைஒஸ்மானியாஜின்னாமைதானத்தில்நடைபெற்றபோது மார்க்க சொற்பொழிவினை மௌலவி எம்.ஐ மஹ்மூத் பலாஹி மேற்கொண்டார்.இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன் ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டீயம் பிரார்த்திக் கொண்டனா்.ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அகதி வாழ்வு

(சாகரன்)
அகதி……… இன்றைய நவீன உலகத்தின் புதிய பிரச்சனை. ஆதி மனிதன் வறுமை, வறட்சி, வளம் இன்மை காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து தமது வாழ்வை உறுதிப்படுத்தினான். அன்றெல்லாம் நாடுகள் என்ற எல்லைகள் இருக்கவில்லை. எனவே வாழ்வைத் தேடி தடையின்றி? நகரக் கூடியதாக இருந்தது. இன்று நாடுகள், தேசங்கள் என்று எல்லை வகுத்திருப்பதினால் இலகுவில் இடம் பெயர முடியவில்லை. அகதி வாழ்விற்கு பல காரணங்கள் இருந்தாலும் போர்… யுத்தம் என்பனவே முதன்மைக் காரணிகளாக அமைகின்றன. மக்கள் பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து அகதியாகும் போது பாதுகாப்பிற்கு சம அளவில் தமது பொருளாதார நிலைப்படுத்தலைக் கவனித்தில் கொள்கின்றனர். நாடுகளும் தமக்கு குறைந்த கூலியில் ‘பிரச்சனைகள் அற்ற” மனித வளம் தேவைப்படுவதைக் கருத்தில்; கொண்டே அகதிகளை எற்கின்றனர். ஆனால் நாடுகள் மனிதாபிமானம், உதவுதல் போன்ற கோஷங்களையே முன்னிலையில் வைக்கின்றனர் இலங்கைத் தமிழரான நாங்களும் எமது மொழி, காலச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றுடன் ஒத்திசையும் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம் பெயருவதை விட மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை சீர்தூக்கிப் பார்த்து அகதிகளாக இடம்பெயர விரும்புகின்றனர். இல்லாவிடின் நாம் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அதிகம் இடம்பெயர்ந்து இருந்திருப்போம். இதுவே இன்று சிரியா போன்ற நாட்டிலும் நடைபெறுகின்றது. போர்கள் நிறுத்தப்படாத வரைக்கும் அகதிகள் உருவாதல் நிறுதப்பட முடியாது. குறைந்த கூலியில் மனித வளம் தேவைப்படும் வரை யுத்தங்களும், அகதிகள் பிரச்சனைகளையும் முதலாளித்துவ நாடுகள் தக்க வைத்துக்கொண்டே இருக்கும்