இந்தியா, பங்களாதேஷ் எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்கள்

இந்தியா- பங்களாதேஷ் நட்புக் குழாய் (IBFP) இந்தியாவில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் இணைப்பை மேம்படுத்தும். அஸ்ஸாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அண்டை நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் ​தொன் டீசலை வழங்கும் திறன் கொண்ட எல்லை தாண்டிய பைப்லைனை இந்தியா மற்றும் வங்கதேசம்   திறந்து வைத்தன.

நிலநடுக்கத்தில் இதுவரை 14 பேர் பலி

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதுடன், வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பீதியடைந்த குடியிருப்பாளர்கள் வீதிகளில் நிற்கின்றனர். ஈக்வடார் மற்றும் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.  இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓர் அரசியல் கைதியின் வேண்டுகோள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலைச் செய்யப்பட்டாரர்.

காட்டெருமைகள் படையெடுப்பு: அச்சத்தில் மக்கள்

காட்டுப்பன்றி, நரி, அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு குடிகொண்டுள்ளது.

மட்டு. – அம்பாறை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வரும்

“காலாகாலமான பிரச்சினையாக இருந்து வருகின்ற அம்பாறை- மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினை இனியும் தொடரக்கூடாது. இரு மாவட்டச் செயலாளர்களின் கலந்துரையாடலோடு, ஜனாதிபதியின் இணக்கப்பாட்டோடு, இது தீர்த்து வைக்கப்படும்”. இவ்வாறு கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரணிலை விரட்டும் ஆட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம்

“ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.

பலருக்கும் மது கசந்தது

இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளது என கலால் திணைக்கள அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

விமான டிக்கெட் விலை மேலும் குறையும்

அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.