குடியுரிமை சட்டத்திருத்தம் வேண்டாம்!

“குடிமக்கள் பதிவேடு” வேண்டும்!

(ஐயா கி. வெங்கட்ராமன்,)
பொதுச்செயலாளர்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

இந்தியா முழுவதும் இந்தியக் குடிமக்களைக் கணக்கெடுக்கும் “தேசிய குடிமக்கள் பதிவேடு” (என்.ஆர்.சி.) செயல்படுத்தப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இங்கு வாழும் மக்களில் இந்திய நாட்டுக் குடிமக்கள் யார் என்பதற்கான பதிவேடு குடிமக்கள் பதிவேடாகும்.