யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?

1. திருப்பித் திருப்பி அதிகாரத்தொனியிலேயே அறிக்கைகள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எப்போது சமூகத்திற்கு முன் மாதிரியாக நடந்தார்கள் அவர்கள் கூப்பிட்டதும் கூட்டத்திற்கு வருவதற்கு. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பெண்களின் நிலை என்ன? பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் கேவலமான வன்முறையில் ஈடுபடுவது ஏன்? இதுவரை தமிழ் சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு வெள்ளையடிப்பதற்கு அரசியல் கைதிகள் பிரச்சினையை கையிலெடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது?

(“யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?” தொடர்ந்து வாசிக்க…)

திருத்தப்பட வேண்டிய தவறுகள்

(எஸ்.கருணாகரன்)

இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே.

(“திருத்தப்பட வேண்டிய தவறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்

(கே. சஞ்சயன்)

புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன.

(“குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!

ஆட்சிக்கு வந்த முசோலினி ‘இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை அழித்துவிடுவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தான். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்தான். பத்திரிகை சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினான். தன்னை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினான். தன் எதிரிகள் என்று அடையாளம் கண்ட அனைவரின் தலைகளையும் துண்டிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான்.

(“தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!” தொடர்ந்து வாசிக்க…)

சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி

(மொஹமட் பாதுஷா)

தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. (“சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் அரசு ஆப்பு அடிக்க தயார் ஆகிறது, இனிவரும் காலங்களில் சுவிஸ் விசாவுக்கு தடை.

சுவிஸ் சட்டத்தரணியான திரு.ரஜீவ் லிங்கநாதன், தூண் மாநில அரசியல் பிரமுகரான திருமதி. தர்சிகா கிர்ஷானந்தன், தூண் மாநில பிரமுகரான திரு.சுப்பையா வடிவேலு, லுகானோ மாநில பிரமுகரான விசுவலிங்கம் ஈஸ்வரதாஸ் மீதும் சட்டம் பாயவுள்ளது, உதவி செய்ய போனவர்களும் இனிவரும் காலங்களில் உதவ முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது .

(“சுவிஸ் அரசு ஆப்பு அடிக்க தயார் ஆகிறது, இனிவரும் காலங்களில் சுவிஸ் விசாவுக்கு தடை.” தொடர்ந்து வாசிக்க…)

பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறை சாத்தியமா?

மீண்டும் மீண்டும் நாவுக்கரசருக்கு சிவன் முதல் அடி எடுத்து கொடுத்து பித்தா பிறைசூடி என பாடவைத்தது போலவே பத்தி எழுத்தாளார் எனக்கும் வழி சமைத்து தருகிறார். எமக்குள் எந்தவித அறிமுகமும் இதுவரை இல்லை. அவரின் எழுத்துக்களை மட்டும் ரசிப்பவன் நான். ஆனால் ஒரு ஒற்றுமை. அவர் இருப்பது நான் பிறந்த கிளிநொச்சி மண்ணில். அதனால் தானோ ஒருவகை ஈர்ப்பு.

(“பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறை சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

(“இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

(“தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்” தொடர்ந்து வாசிக்க…)

கிரான் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை (31) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

(“கிரான் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)