டொலர் வரக்கூடிய ஒரு வழி

(ச.சேகர்)

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.