அலையெனத் திரண்ட தமிழ்மக்கள்…

உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்.

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

சங்கத் தமிழ்! தங்கத் தமிழ்!!

இந்தியாவிலேயே எழுத்துக்கள் முதன்முதலில் தோன்றிய, கல்வி அறிவினுடைய தலையாய நிலமாக விளங்கிய ஒரு மாநிலத்தில் நாம் இருக்கிறோம். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே அந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. 28 கி.மீ சுற்றளவிற்குள் 20 இடத்தில் 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துக்கள் இருக்கின்ற ஒரே நகரம் உலகத்திலேயே மதுரை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும்.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 13: ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2021 ஜூலை எட்டாம் திகதி, ஜப்பானிய மேலவைத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் பிரசார நிகழ்வில், வீதியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்தார். இது ஜப்பானில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றுவரை, இக்கொலைக்கான காரணங்கள் குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. 

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது முறையாக இன்று கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இன்று (06) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மாதம் 25ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் அரசியலமைப்பு பேரவை கூடிய போது, பேரவையின் ஆணைக்குழு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கான மரணப் பொதியே ’13’

இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டுச் சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் என்றும் இது தமிழர்களுக்கு சவக்குழி, மரண பொதி என்றும் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் இதை நாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

காணி விடுவிப்பு குறித்து பலாலி மக்கள் கவலை

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் தங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை என்றும் சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய நெல்லினங்கள் அறுவடை

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் உபஉணவு பயிற்செய்கை அறுவடை விழா, விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் வியாழக்கிழமை(02) நடைபெற்றது.

துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த 9 இலங்கையர்கள்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி இடமாக உருவாகிறது நெதர்லாந்து

பெட்ரோலியப் பொருட்கள், இலத்திரனியல் (எலக்ட்ரானிக்) பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் அலுமினியப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக, இந்த நிதியாண்டில் ஏப்ரல்-டிசெம்பர் மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாக உருவெடுத்துள்ளது.