வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 13: ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2021 ஜூலை எட்டாம் திகதி, ஜப்பானிய மேலவைத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் பிரசார நிகழ்வில், வீதியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்தார். இது ஜப்பானில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றுவரை, இக்கொலைக்கான காரணங்கள் குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை.