ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்திலான ஜனநாயகக் கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் தமது உடன்படிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

(“ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!” தொடர்ந்து வாசிக்க…)

புலி – மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம்

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

(“புலி – மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம்” தொடர்ந்து வாசிக்க…)

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும். தந்தை செல்வா தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளைக் கோரி அஹிம்சை வழிப் பயணம் மேற்கொண்டார். போராட்டங்கள் எல்லாம் உடனடியாக பயன் தராது போனாலும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய நடவடிக்கைகளை அவர் மரணிக்கும் வரைக்கும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் முன்னெடுத்து வந்தார்.

(“மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!” தொடர்ந்து வாசிக்க…)

அறுவடைக் காலம்?

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து வைத்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

(“அறுவடைக் காலம்?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!

கடந்த ஞாயிறன்று இலங்கை அரசின் நீர்ப்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சூழ இரண்டு கிலோ மீட்டர் பகுதியளவில் நீர் நச்சாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அந்த நீரை அருந்த முடியாது எனவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் மறுபக்கத்தில் நீர் நஞ்சாக்கப்பட்டமைக்கான தீர்வு இரணை மடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் திட்டமே எனக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நீர் மட்டும் நஞ்சாகவில்லை விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்களும் பச்சை மரங்களும் பட்டுப்போகின்றன.

(“வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை!!

சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜராவதற்கு தேவையான செலவுகளை ஏற்பதாக தெரிவித்துள்ளார். சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காணொளி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அதற்கான வசதிகள் இல்லாததால், அந்தக் கருவிகள் அமைக்க தேவையான செலவுகளை ஏற்பதாக டக்ளஸ் தேவானந்தா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

(“டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை!!” தொடர்ந்து வாசிக்க…)

எமில் காந்தனுக்கான பிடியாணை வாபஸ்

தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று வாபஸ் செய்துள்ளது. எமில் காந்தன், சரணடைவதாக வழங்கி உறுதியை அடுத்தே இவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

(“தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமும் சுய நிர்ணைய உரிமை கோரும் போலித்தனமும்!

வட மாகாண அரசு என்ற ஒற்றையாட்சி நிர்வாகக் கூறின் அரசியலை ஒரு புறத்தில் தலைமையேற்று நடத்தும் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு மாற்றத்திற்கான முன் மொழிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முன் மொழிவு அதன் முன்னோட்டத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை தொடர்பாகக் குறிப்பிட்டாலும், அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கான முன் மொழிவில் சுய நிர்ணைய உரிமை குறித்துப் பேசாமல் வெறுமனே ஒற்றையாட்சியின் கீழான சமஷ்டி முறைமையையே முன்வைத்துள்ளது.

(“தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமும் சுய நிர்ணைய உரிமை கோரும் போலித்தனமும்!” தொடர்ந்து வாசிக்க…)

அதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை!

மாகாணசபை உறுப்பினரின் ஒலிவாங்கியை கைப்பற்ற சென்ற மத்திய அமைச்சரின் மேலதிக செயலாளர், அதை தடுக்க வந்தவரை பார்த்து கூ ஆர் யு [ who are you ] எனகேட்க, மற்றவர்கள் அவரைப் பார்த்து அதையே திருப்பி கேட்க, ஆரம்பித்த தள்ளுமுள்ளு, அடிதடி, தண்ணீர்ப் போத்தல் ஏறி எனத் தொடர்ந்து, மாகாண அமைச்சர் உதடு வெடித்து இரத்தம் பெருக, மாகாணசபை உறுப்பினர்கள், மத்திய அமைச்சரின் கட்சி உறுப்பினர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் த.தே.கூ உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தவேளை, முதல்வரை பாதுகாப்பாக அவரது காவலர்கள் அழைத்து சென்றனர். அதன் பின் முதல்வர் அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட தேவையற்ற கருத்தால் பிரச்சனை உருவானது என்றும், அவரால் கூட்டிவரப்பட்ட இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது, என்றும் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டார்.

(“அதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)