தோழர் சங்கர் ராஜி என்ற விடுதலை ஆளுமை…!

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டம் சாராம்சத்தில் இரு அம்சங்களின் அடிப்படையில் ஆரம்பமானது என்பதே உண்மைநிலை ஒன்று வெறும் தேசியவாதம்(வெறி என்று கூறுவது சிறப்பாக இருக்கும்) அடிப்படையில் உருவாக்கம் பெற்றது இது தமிழர் விடுதலைக் கூட்டணியால உசுப்பேத்தப்பட்டு மரம்பழுத்தால் வெளவால் வரும் என்பதை நம்பி ஆமாற்து துப்பாக்கி தூக்கிய நிலை .ந்த போக்கை புலிகள் ரெலோ புலிகளில் இரந்தபிரிந்த புளொட் என்பன பெரிதும் தமக்குள் கொண்டிருந்தன.(புளொட் என்ற அமைப்பின் தோற்றத்தின் பின்பு(இடதுசாரி சிந்தனையாளர் சிலர் இதற்குள் உள்வாங்கப்பட்டது உண்மைதான்).

(“தோழர் சங்கர் ராஜி என்ற விடுதலை ஆளுமை…!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு

(முதலாவது ஈழவிடுதலைப் போராட்டக்குழுக்களிடையே ஐக்கியம் என்பது இல்லை என்பதைவிட ஏகபோகத் தலமையின் விருப்பால் புலிகள் ஏனையவிடுதலை அமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்தி தடை செய்தனர் என்ற விடயம் திரிபுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது கருணாவின் பிரிவு அவரின் கருத்தியல் அடிப்படையில்(இது சரியா பிழையா என்பது வேறு விடயம்) ஏற்பட்டது இதனை பிரபாகரன் மீண்டும் தனது ஆயுத வன்முறை மூலம் கருணாவை இல்லாது ஒழிக்க முற்பட்டார் என்பது ஏதோ கருணா தான்தோன்றித்தனமாக பிச்சுக் கொண்டு வெளியேறியதாக திரித்துக் கூறப்பட்டுள்ளது – ஆர்)

(காரை துர்க்கா)

இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது.

(“கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும்

(எழுக தமிழ் என்று சொல்லி உசுப்பேத்தும் அரசியலில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லை ஆகினும் தமிழ் மக்கள் பேரவையின் சுய ரூபத்தை அம்பலப்படுத்த இந்தக் கட்டுரையும் உதவலாம் என்பதன் அடிப்படையில் பிரசிரிக்கின்றோம்- ஆர்)

(புருஜோத்தமன் தங்கமயில்)

இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது.

(“எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும்” தொடர்ந்து வாசிக்க…)

பரிந்துரைகளை நிராகரித்தமை பிழை

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவையை, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது என்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“பரிந்துரைகளை நிராகரித்தமை பிழை” தொடர்ந்து வாசிக்க…)

காணி வீட்டு உரிமை பிரச்சினை மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னேடுக்க மலையக சமூக நடவடிக்கை குழு தீர்மானம்

காணி வீட்டு உரிமை பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்வதுடன் அது தொடர்பாக மலையக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் அரசாங்கமும், அரசாங்கம் சார்பான மலையக தலைமைகளும் செயற்பட்டு வருவதனால் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக விழிப்பூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மலையக சமூக நடவடிக்கைகுழுவின் மத்திய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

(“காணி வீட்டு உரிமை பிரச்சினை மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னேடுக்க மலையக சமூக நடவடிக்கை குழு தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)

எனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தலைமை தாங்கி வருவதாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க குற்றஞ்சாட்டினார். தனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் அடிப்படைவாதத்தை இனவாதமாக்கி வருகின்றனர். இனவாத செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதியொருவர் தலைமை தாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

(“எனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும்

அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

(“வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும்” தொடர்ந்து வாசிக்க…)

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!!

1.ஆதவன்
2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
3.அம்பி ( செயற்பாடு தெரியாது)
4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்கள
ை பராமரித்தவர்)
16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34.இசைபிரியா ( ஊடக பிரிவு)
35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

வட மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த சனியன்று தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்குவங்கி அரசியலுக்குள் நுளைக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கைப் பேரினவாத அரசின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகச் செயற்பட்ட விக்னேஸ்வரனின் திடீர் தேசியவாதத்தின் பின்புலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்தியங்களின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ள இலங்கை அரசியலில் ‘தமிழ்த்’ தேசியவாதத்தை விக்னேஸ்வரன் கையகப்படுத்தியுள்ளதன் பின்புலத்தில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் பங்கையும் அவதானிக்க முடிகிறது.

(“வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி” தொடர்ந்து வாசிக்க…)

2017: காத்திருக்கும் கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல் எளிதல்ல நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்….

(“2017: காத்திருக்கும் கதைகள்” தொடர்ந்து வாசிக்க…)