உண்மை காதலுக்கு என்றும். மரணமில்லை ..!

மனைவியை
தாயாக

நினைத்து பார்த்து கொள்ளும்
ஆண்களும்….!

கணவனை
பிள்ளையாக

நினைத்து பார்த்து கொள்ளும்
பெண்களும்…!

இருக்கும் வரை
உண்மை

காதலுக்கு என்றும்.
மரணமில்லை ..!

– குடாநாட்டான் –

தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!

சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.

(“தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம், காணி வீட்டுரிமை எனும் வாக்குறுதிகள் மறைந்து வரவு செலவு திட்டத்தில் எமது வரவு பற்றி எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு வழமைப் போலவே ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாத்தா காலத்திலிருந்து அமைச்சராக இருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த மலையகத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் UNP யின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), ஒன்றிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பன முதலாளிமார் சங்கத்துடன் சேர்ந்து சம்பள உயர்வு பெற்றுக் கொள்வதில் எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் பெற்றதாக தெரியவில்லை.

(“அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை – வரதராஜபெருமாள்,

அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­குழு அவ­சியம் : வர­த­ரா­ஜ­பெ­ருமாள் வலி­யுறுத்து

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை. எதிர்­கா­லத்தில் அதற்கு வழி­வ­குக்க கூடிய வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது அதி­கா­ரப்­ப­கிர்­வைக்­கொண்ட ஒற்­றை­யாட்­சிக்­குட்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணைக்­கு­ழு­வொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென வட­கி­ழக்கின் முன்னாள் முத­ல­மைச்­ச­ரான வர­த­ரா­ஜ­பெ­ருமாள் விசும்­பா­ய­வி­லுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் பொது­மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றி­வதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள சிவல் குழுவின் தலை­மைக்­கா­ரி­யா­லயத்தில் நேற்­றை­ய­தினம் 22 பக்­கங்­க­ள­டங்­கிய தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

(“இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்­வாகும். தற்­போ­தைய நிலையில் அது சாத்­தி­ய­மில்லை – வரதராஜபெருமாள்,” தொடர்ந்து வாசிக்க…)

விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு

அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று(22) நடைபெறவுள்ளது. வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் இனறைய தினம்(22) மக்களிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

(“விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’

அச்சுவேலி நவக்கிரி பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட விரிசலானது, பாறைகளில் ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் விரிசல்கள் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர். ஏஸ்.ரீ.வீ. இராஜேஸ்வரன், தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார். அச்சுவேலி, நவக்கிரியில் தருமசிறி என்பவரின் வீட்டுச் சுவரில் சனிக்கிழமை (23) அதிகாலை பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்திலும் விரிசல்கள் ஏற்பட்டன.

(“‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் சாணக்கியம்

வடக்கில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பு இப்போது சலனமின்றி ஓய்ந்து போய்க் கிடக்கிறது. எத்தகைய விறுவிறுப்புடன் தமிழ் மக்கள் பேரவை உருவாகியதோ அத்தகைய வேகத்துடனேயே அது உறங்கிப் போய் விட்டது போல தற்போது தோன்றுகிறது.

(“சம்பந்தனின் சாணக்கியம்” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்

இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார். கனடாவின் டொரேண்டோவில் வசித்து பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது கேப்டன் பதியை பேட்டி கண்டார். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சகாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

(“இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.