40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

(“40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்” தொடர்ந்து வாசிக்க…)

மனிதம் இன்னும் வாழ்கிறது! நிரூபித்தனர் தமிழர்கள் உள்ளிட்ட குவைத் வாழ் மக்கள்!! குவிந்தன குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!!!

உள்நாட்டு போரின் பிடியில் சிக்கியுள்ள சிரியாவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். சிரியாவின் பெரிய நகரம் அலெப்பா. இங்குதான் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. அங்குள்ள மருத்துவமனை தாக்கப்பட்டு மருத்துவக் கருவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டன. ஆனால், போரில் காயமடையும் மக்கள் அந்த மருத்துவமனையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இந்த அபலை மக்களின் துயரங்களுக்கு அங்குள்ள இந்த மருத்துவமனையும் சில மருத்துவர்களும்தான் ஆறுதல். காயம்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய கட்டில் இல்லாத காரணத்தால் அவர்களை தரையில் படுக்க வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

(“மனிதம் இன்னும் வாழ்கிறது! நிரூபித்தனர் தமிழர்கள் உள்ளிட்ட குவைத் வாழ் மக்கள்!! குவிந்தன குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

நடிகையுடன் மோதுகிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அங்கிகரிப்பதற்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில், நடிகை மெரைல் ஸ்ட்ரீப் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அவருக்கெதிரான கருத்துகளை, ஐ.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மெரைல், அந்த மேடையைப் பயன்படுத்தி, ஊடகவியலாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அங்கவீனமாவர்களுக்கும் ஆதரவான கருத்தை வெளிப்படுத்தினார்.

(“நடிகையுடன் மோதுகிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டுமக்கள் விரும்புவதை அரசாங்கங்கள் செய்வது மிகக்குறைவு. அதேபோல அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்கள் ஆதரவை வேண்டி நிற்பதில்லை. ஆனால் மக்கள் விரும்பாத, ஆதரவு தராத செயல்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கள் செய்கின்றன. இது ஒருவகை முரண்நகை.

(“செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா” தொடர்ந்து வாசிக்க…)

இனிக்கும் பொங்கல் இனி எமக்கு எப்போது?

தை மாதப் பிறப்பு என்பது மண்ணை நம்மி வாழும் விவசாய பெருமக்கள், தம் நன்றிக்கடனை சூரியனுக்கு பொங்கலிட்டும், மறுநாள் உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளுக்கும், பயிருக்கு உரமான எருவை தந்த தமது பட்டி மாடுகளுக்கும், அனைத்துக்கும் மேலாக பயிர்கள் விளைந்து பலன் தரும்வரை தம்மை தக்கவைக்க, பால் தந்த பசுவுக்கும் நன்றி செலுத்தும் நாள்.

(“இனிக்கும் பொங்கல் இனி எமக்கு எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

வினை தீர்க்கான் வேலவன்

ஈழத் தமிழர்கள் ‘நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்’ என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப் பேசும் போது குழப்பமாகத் தான் இருக்கும்.

(“வினை தீர்க்கான் வேலவன்” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்

இவ்வளவுநாட்களாக மோடி அரசு பணமதிப்பு நீக்கம் ரிசர்வ் வங்கியின் முடிவு என்று சொல்லிவந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி இது அரசின் முடிவு என்கிறது. இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று வெளியில் செல்வதற்கு கூட தைரியமற்ற பிரதமர் தான் 56″ நெஞ்சு பற்றி (தற்)பெருமை பேசுகிறார். கோடிக்கணக்கான மக்களை ,ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய முடிவை எவ்வித பொறுப்பும்,சிந்தனையும் இல்லாமல் மக்கள் அடையக்கூடிய இன்னல்கள்,தேசத்திற்கு ஏற்படக் கூடிய இழப்பைப் பற்றி எவ்வித அக்கறையும்,புரிதலும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைப்பை ,பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவை இந்தியா மட்டுமல்ல இன்று உலகமே விமர்சிக்கிறது.

(“நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

3 இலட்சம் டொலருடன் வரும் வெளிநாட்டவருக்கு தற்காலிக விசா

3 இலட்சம் அமெரிக்க டொலருக்கு அதிகமாக இலங்கையில் முதலிட தயாராக இருக்கும் வௌிநாட்டு பிரஜைக்கு, இந்த நாட்டில் 5 வருடங்களுக்கு தங்கியிருப்பதற்கான விசா வழங்கப்படும்” என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

(“3 இலட்சம் டொலருடன் வரும் வெளிநாட்டவருக்கு தற்காலிக விசா” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!

(சாகரன்)

‘A single spark can start a prairie fire’ என்று கூறினார் சீனப் புரட்சியின் தந்தை மாவோ சே துங். கனடா வந்திருக்கும் இலங்கை வடமாகாண சபையின் முதல் அமைச்சர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மொதம் 18 கேள்விகள் ஊடகவியலாளர்கள், அமைப்புகளால் கேட்கப்பட்டன. இதில் 17 கேள்விகளும் வடமாகாணப சபையின் முதல்வரை சிந்திக்க வைப்பதற்கு பதிலாக அவரை சந்தோஷத்திற்குள் உள்ளாக்க முன்வைத்த அரசவை புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பொற்காசு பெறும் கேள்வி என்ற வரையறைக்குள் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தன. தற்போதைய வடமாகாண சபையின் யதார்த்த செயற்பாட்டை கேள்விகளுக்குள் உள்ளாக்கும் நோக்கில் வைக்கப்பட்டன அல்ல.

(“வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!” தொடர்ந்து வாசிக்க…)