Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
Category: செய்திகள்
கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றார். அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வார். பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழு கனடாவின் வான்கூவரில் ஜூன் 24 முதல் 26 வரை நடைபெறும்.
பரந்தன் கெமிக்கல்ஸ் தலைவர் நேசராஜன்
போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்?
போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு
ஈரான் தாக்குதல் கச்சா எண்ணையின் விலை அதிரடியாக உயர்வு
ஈரான் விமான நிலையங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்
மக்காச்சோள விற்பனையில் மோசடி
கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிப்பு
மத்திய மலைநாட்டில் திங்கட்கிழமை (23) அதிகாலை முதல் நிலவும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் அதை ஆண்டிய வீதிகளில் இவ்வாறு கடும் பனி நிலவுகிறது. குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அ’புர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை
அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஓகஸ்ட் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.