மக்களோடு மக்களாய்…..SDPT

உள்ளுர் ஆட்சி சபைத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யினர் அம்பாறை மாவட்lத்தில் அவர்களின் கட்சிச் சின்னமான மெழுகு திரிச் சின்னத்தில்

விருந்துபசார ஏற்பாடுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய  அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

’முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நடவடிக்கை’

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார்

கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் 103984 ஹேரத் அதிகாரிக்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, உடனடியாக செயல்படுத்தப்பட்ட அதிகாரி, பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்த இளம் பெண்ணையும் காப்பாற்றியுள்ளார். இளம் பெண் கட்டுகஸ்தொட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்.தற்போது அந்த இளம் பெண் மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தொட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொண்டீஸ்வரம்

தொண்டீஸ்வரம் இலங்கையின் தொன்மையான பஞ்ச ஈச்சரங்களுள் ஒன்றாக தென் பகுதியில் உள்ள தேவேந்திர முனையில் மாத்தறையில் காணப்பட்டதாகவும் போர்த்துக்கீசர் காலத்தில் அழிவுற்றதாகவும் வரலாறு கூறுகிறது.

தேவேந்திர முனைப்பகுதியில் கோபுரமும் விக்கிரகங்களும் அகற்றப்பட்டு வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இன்றி தொல் பொருளியல் திணைக்களத்தினால் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் புராதன சிவாலயங்களை ஒத்திருக்கும் இந்தக் கட்டிடம் ஏன் தொண்டீஸ்வரத்தின் சிதிலமாக இருக்கக் கூடாது ? அருகாமையில் வசிக்கும் தென் பகுதி மக்களினால் இது இராவணனினால் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. இதை ஆய்வு செய்வதற்கு தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்

அத்துமீறிய செயற்பாடு அகற்றப்பட்டது

(Karunaivel Ranjithkumar)

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கைமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் அவர்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் 11.04.2025இன்று அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

‘கலிப்சோ’ ரயில் சேவை ஆரம்பம்

‘கலிப்சோ’ எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவை, நானுஓயா மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும்.

யாழ்ப்பாணம்: போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான இந்தச் சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டன.

மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் 9 மீனவர்கள் கைது

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் வியாழக்கிழமை (09)  இரண்டு படகுடன் கைது செய்யப்பட்ட ஒன்பது  மீனவர்களும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும்  16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.