அரிதாகி வரும் ஐடி ஊழியர்களின் புது வீடு கனவு: சென்னையில் விற்பனை கடும் சரிவு

ஐ.டி. துறையில், வேலைவாய்ப்பு மற்றும் சம்பள உயர்வு குறைந்து வருவதால் அத்துறை ஊழியர்கள் வீடு வாங்குவதை குறைத்துள்ளனர். இதனால் சென்னையில் புதிய வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் விசா கெடுபிடி என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனால், ஐடித்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு சேர்ப்பதை கணிசமாக குறைத்துள்ளன.

(“அரிதாகி வரும் ஐடி ஊழியர்களின் புது வீடு கனவு: சென்னையில் விற்பனை கடும் சரிவு” தொடர்ந்து வாசிக்க…)

கைதாகிய முதலமைச்சர் பிணையில் விடுவிப்பு

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலிடச் செய்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில், நேற்று (23) சரணடைந்தார்.

(“கைதாகிய முதலமைச்சர் பிணையில் விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

முழங்கால் விவகாரத்தால் பதுளை சூடானது

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, அச்சுறுத்தி முழங்காலிடவைத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. முதலமைச்சர் முன்னிலையில் முழங்காலிட்டு, வணங்கி மன்னிப்பு கேட்ட விவகாரத்தை அந்த அதிபர் மூடிமறைத்தார். எனினும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

(“முழங்கால் விவகாரத்தால் பதுளை சூடானது” தொடர்ந்து வாசிக்க…)

ஏ.இ. மனோகரன் காலமானார்

சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன்  சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார்.  அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.

‘ஜெருசலேம் முடிவு, பலஸ்தீனத்துக்குக் கிடைத்த அறை’

இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் முடிவை, தமது நாட்டுக்குக் கிடைத்த அறை எனக் குறிப்பிட்டுள்ள பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ், இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பான மத்தியஸ்தத்தில், ஐ.அமெரிக்கா தனித்துச் செயற்படுவதை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

(“‘ஜெருசலேம் முடிவு, பலஸ்தீனத்துக்குக் கிடைத்த அறை’” தொடர்ந்து வாசிக்க…)

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை

ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, 14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இணைந்து செய்த உதவி… யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வீடமைத்து வழங்குவதற்கான அடிக்கல் இன்று நட்டி வைக்கப்பட்டுள்ளது.

(“பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை” தொடர்ந்து வாசிக்க…)

கோவிலில் கொடுமை சட்ட விரோத நடவடிக்கை மகளே பதில் கூறுங்கள்

ரொறன்ரோ ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்தினால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

(“கோவிலில் கொடுமை சட்ட விரோத நடவடிக்கை மகளே பதில் கூறுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

துயர் பகிர்வு அறிவித்தல்

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கரடிப்பூவலார் சித்த ஆயுள்வேத வைத்தியர்மான செல்லையா சாமிநாதர் இன்று 15/01/2018 சிவபதமடைந்தார் அன்னாரின் ஈய்மை கிரியைகள் 17/ 01/2018 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனகிரியைகாக குமுழமுனை தாமரைக்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறித்தலை உற்றார் உறவினர் அனைவரும் எற்றுகொள்ளுமாறு அறியதருகின்றனர் குடும்பத்தினர். (“துயர் பகிர்வு அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

துயர் பகிர்வு அறிவித்தல்

எம் குடும்பத்தில் ஒருவராக எம்முடன் வாழ்ந்து துன்பமான தருணங்களில் அருகிருந்து வழிகாட்டி கவலைகளை மறக்க நகைச்சுவை கதை சொல்லி எம்மை மகிழ்வித்து எம்முடன் வாழ்ந்து பசுமையான நினைவுகளை விட்டு மறைந்த எமது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மாமாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள். (“துயர் பகிர்வு அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)