விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் – சரத் பொன்சேகா

நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். இந்த தகவல்களை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று படையினர் விடுத்த வேண்டுகோளின் பின்னர் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். முதல் கட்டமாக 50ஆயிரம் பேர் தப்பிவந்தனர். இதன்பின்னர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே அதிகளவான மக்கள் வெளியேறினர். இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி 150, 000 பேர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
இதேவேளை மே 14ஆம் திகதியன்று 85ஆயிரம் பேர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினர் இதனையடுத்து மே 19இல் போர் முடிவுக்கு வந்தது என்றும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் எம். பிகள் நியமன விவகாரம் ஏற்கனவே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தேர்தல் கேட்டு தோற்றுப் போன வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் எம். பிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வழக்குத் தாக்கல் செய்து உள்ளனர்.

(“இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 25 வது ஆண்டை அந்த ஊர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூர்ந்தனர்.
சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு. ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

(“சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு” தொடர்ந்து வாசிக்க…)

அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்த அமைச்சு பதவிகள் இதுவரை ஐந்து!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.யாழ். மாவட்ட அமைச்சராக சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட அமைச்சராக சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராக ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரே பதவி பெற்று உள்ளன. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டால் மட்டுமே அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வோம் என இவர்கள் தேர்தலுக்கு முன்னர் மங்கம்மா சபதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

(Brin Nath with Karthigesu Nirmalan-Nathan)

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இதன்படி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியி டப்பட்ட இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு சாதகமான பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பநாளில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றும்போது குறிப்பிட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை அமைப்பது, காணாமல் போனவர்களுக்கான அலு வலகமொன்றை நிறுவுதல், நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அலுவலகத்தை அமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

(“அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய மீனவர்களின் கோரிக்கை கடற்றொழில் சங்கங்களால் நிராகரிப்பு

இந்திய மீனவர்கள் ரோலர் இயந்திரங்களை பயன்படுத்தி பலவந்தமாக வடக்கு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் இந்தியாவுக்கு சமூகமளிக்குமாறு அந்நாட்டு மீனவர் சங்கம் பிரதிநிதிகள் விடுத்திருந்த கோரிக்கையை வடக்கு கடற்றொழில் சங்கங்கள் நிராகரித்துள்ளன. இந்த கோரிக்கையை நிராகரித்தமைகான காரணம் என்ன என்பது தொடர்பில் வடக்கு கடற்றொழில் சங்கத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவனிடம் கேட்டபோது, மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு சாதாரண மீனவர்கள் பேச்சுநடத்தி தீர்வு காண முடியும் என்று நம்பவில்லை என்பதனால் அந்த அழைப்பை நிராகரித்தோம். இந்திய மீனவ சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள் இந்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இரண்டாகப் பிரிகிறது தலிபான் குழு?

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள், இரண்டு பிரிவுகளாகப் பிளவுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாக, தலிபான் தரப்புகள் தெரிவிக்கின்றன. தலைவர் பதவி தொடர்பாக எழுந்துள்ள கருத்து முரண்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் தலைவராகக் காணப்பட்ட முல்லா ஓமர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவராக முல்லா அக்தர் மொகஹட் மன்சூர் நியமிக்கப்பட்டார். எனினும், அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்கு, சில உயர்நிலைத் தலைவர்கள் உட்பட தலிபான்களின் ஒரு பகுதியினர் மறுத்து வருகின்றன. முல்லா ஓமரின் உதவித் தலைவராகக் காணப்பட்ட மன்சூர், முல்லா ஓமரின் மரணத்தை மறைத்து விட்டதாகவும் அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, அவசர அவசரமாக மன்சூர் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் சில தளபதிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர். ‘நிலைமையைப் புரிந்து கொள்ளவும் புதிய தலைவரை புரிந்துணர்வின் அடிப்படையில் உயர் சபை தெரிவுசெய்வதற்காக பதவி விலகுவதற்கும், மன்சூருக்கு இரண்டு மாதங்கள் வழங்கினோம். ஆனால், அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்” என, மன்சூருக்கு எதிரான தரப்பின் பேச்சாளரான முல்லா அப்துல் மனன் நியாஸி தெரிவித்தார். எனினும், இரு தரப்புக்குமிடையில் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதை உறுதிப்படுத்த மறுத்த அவர், ஆப்கானிஸ்தான் படையினர் மீது தாங்கள் தனியாகத் தாக்குதல் நடாத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற போராளிகள் சிரியாவுக்குள் நுழைவு

சிரியாவில் செயல்படும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவை எதிர்கொள்ள, அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட 75 பேர் கொண்ட சிரியப் போராளிகள் குழு ஒன்று துருக்கியில் இருந்து சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆதரவுடன் சிரியாவில் செயற்பட்டு வரும் இரண்டு கிளர்ச்சிக் குழுவினருக்கு துணையாக இருக்கும் நோக்கில், அமெரிக்காவால் பயிற்சிய ளிக்கப்பட்ட இந்தப் போராளிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியா வைத் தளமாக கொண்டு செயற்பட்டு சிரியாவில் இடம்பெறும் மோதலை கண் காணித்து வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட சிரியர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் மாத்திரமே தற்போது அங்கு சண்டையில் ஈடுபட்டு வருவதை அண்மை யில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் ஆயிரக்கணக்கான சிரியர்களுக்கு பயிற்சியளிக்க இருப்பதாக வெளியான தகவல் அண்மையில் ஏளனத்துக்கு உள்ளானது.

காவிகளுக்கு நேருவை கண்டால் அலர்ஜியும் அரிப்பும் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்….

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு ஒருமுறை தமிழக எம்.பிக்களை அழைத்து விருந்தளித்தார். அப்போது நேரு, ‘அடுத்து 100 ஆண்டுகளுக்கு மக்கள் எந்த தலைவரை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருப்பர்.?” என்று கேட்டார். அதற்கு ஒரு எம்.பி, ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’னு சொன்னார். இன்னொரு எம்.பி ‘மகாத்மா காந்தி’னு சொன்னார். மற்றொரு எம்.பி ‘உங்களை தான் பெருமையாக பேசிக்கொண்டு இருப்பார்கள்’னு சொன்னார். ஆனால், இதையெல்லாம் மறுத்த நேரு, ‘நீங்கள் எல்லாம் அரசியல்வாதிவாதிகள். அதனால் தான் அரசியல் சார்ந்த தலைவர்களை குறிப்பிடுகிறீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உங்கள் மாநிலத்தில் உள்ள சமூக சீர்திருத்தவாதி பெரியாரை பற்றி தான் பெருமையாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாடு முன்னேற சமூக ரீதியாக சீர்திருத்தமும் தனி மனித சுய சிந்தனையும் அவசியம். அறியாமை எனும் இருளால் நிரம்பி வழியும் ஒரு நாடு நிச்சயம் முன்னேறாது என உணர்ந்து அதற்காக பாடுபடும் பெரியாரை தான் பெருமையாக பேசிக்கொண்டிருப்பர்’ என்று அவர்களிடம் பிரதமர் நேரு விளக்கினார்.