பொதுச்சேவைகளை முடக்குவோம்: அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 14ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதலும், நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

(“பொதுச்சேவைகளை முடக்குவோம்: அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை” தொடர்ந்து வாசிக்க…)

“என்ட பிள்ளையை காட்டுங்கள்… அவன் மடியில் நான் சாகவேணும்…”

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட தாய் கதறி அழுகை

“என்ட பிள்ளையை காட்டுங்கள். நான் அவனின் மடியில் சாகவேணும்” என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயார் காணாமல் போன ஆணைக்குழுவின் முன்னால் கதறி அழுதார். காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்று நாள் அமர்வு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

(““என்ட பிள்ளையை காட்டுங்கள்… அவன் மடியில் நான் சாகவேணும்…”” தொடர்ந்து வாசிக்க…)

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள். இதுவரையில் எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாயார் ஒருவர் கதறி அழுதார். காணாமல் போனோவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14ஆவது அமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (11) நடைபெற்றபோது, அதில் சாட்சியமளிக்கையிலேயே தனது காணாமல் போன மகள் குறித்து சாட்சியமளித்த தாய் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மலேசியாவில் புலிகளின் விமானங்கள்

 

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளனர். த ஸ்டார் அண்ட் சின் சூ என்ற பத்திரிக்கையில் வௌியாகியுள்ளஅந்த விளம்பரத்தில், “ TF-ARM, TF-ARN, TF-ARH என்ற பதிவு எண் கொண்ட 3 போயிங் 747 -200F ரக விமானங்கள் மலேஸிய விமான நிலையத்தில் உள்ளன

(“மலேசியாவில் புலிகளின் விமானங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சர்வகட்சிக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அந்த ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள 525 முறைப்பாடுகள் ஆகியவற்றை, கட்சி உறுப்பினர்களிடம் கையளித்து அவை அவை தொடர்பில் இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் அறியமுடிகின்றது.

(“சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது – சி.வி

நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

(“புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

போர்க்குற்றங்களை 83லிருந்து விசாரிக்கவும் – டக்ளஸ்

போர்க்குற்ற விசாரணைகள், 1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இதில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(“போர்க்குற்றங்களை 83லிருந்து விசாரிக்கவும் – டக்ளஸ்” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் சி.வியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சம்பந்தன் முயற்சி: சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

(“முதலமைச்சர் சி.வியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சம்பந்தன் முயற்சி: சுரேஸ்” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை மாவட்டம் திருவாதவூர்,அனையூர் முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர்.”திருவாதவூர் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் மாணிக்கவாசகர்”;.அவர் பிறந்த திருவாதவூரில் அமைந்துள்ள முகாமில் 539 குடும்பங்கள் வரை தங்கியிருக்கின்றனர்.இவர்கள் அன்றாடம் உழைத்து கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் முகாமில் உள்ள மக்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,57,000 வரையிலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினர். இந்தப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்,முகாhம் மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் மதுரையில் உள்ள ஆனையூர் முகாம் மக்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.இந்த முகாமில் 485 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்களும் கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள்.இந்த நிலையிலும் இவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,02,160 வரையிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

ஆனையூர் முகாமில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை முகாம் தலைவர் அன்ரனி,ஒருங்கிணைப்புக்குழு றீகன்,பாரதி மற்றும் கல்லூரி மாணவர்கள் சங்கீதன்,திலிப்,பிரகா}ஸ் இவர்களுடன் மணிகண்டன் எனபவரும் கலந்து கொண்டார்.
நிவாரணப் பொருட்கள் 9.12.15 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு நிலையத்தில,; தாசில்தார் புஸ்பா,உதவி தாசில்தார் கே.சுரேஸ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கஸ்டமான வாழ்க்கை நடத்திவரும் அகதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியதுகண்டு நிவாரணப் பொருட்கள் சேமிப்பு நிலைய ஊழியகள்; அதிகாரிகள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

வன்னியிலும் வெள்ளம்…….?

 

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் வன்னிப்பகுதியில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும்பாதை முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது. நாங்கள் இப்பொழுது வளவுகளுக்குள்ளால்தான் போய் வருகிறோம். வண்டி, வாகனங்கள் எதுவும் வர முடியாது. இப்படித்தான் பெரும்பாலான உள்வீதிகள் சேதமாகியிருக்கின்றன. பலவும் சேறாகி விட்டன.

(“வன்னியிலும் வெள்ளம்…….?” தொடர்ந்து வாசிக்க…)